திருவில்லிபுத்தூர், ஜூலை 1- திருவில்லிபுத்தூர் செயின்ட் ஜோசப் ஆர்.சி மேல் நிலைப் பள்ளியில் 21ஆண்டுகள் நெசவு ஆசிரியராகப் பணியாற்றிய இராஜ மாணிக்கம் வெள்ளிக்கிழமையன்று பணி ஓய்வு பெற்றார் அன்னா ருக்கு பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது. பள்ளித் தாளாளர் அருட்பணி சந்தன சகாயம் அடிகளார் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி வாழ்த்தினார். உதவி தாளாளர் அருட்பணி செல்வ நாய கம் வாழ்த்திப் பேசினார். செயின்ட் ஜோசப் ஆர்.சி.பள்ளி குழுமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.ஓய்வு பெறும் ஆசிரியர் இராஜமாணிக்கத்திற்கு ஆசிரியர்கள் சார்பில் நினைவு பரிசாக தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது. ஆசிரியர் இராஜமாணிக்கம் ஏற்புரை வழங்கினார். இராமேஸ்வரத்தில்