districts

மதுரை முக்கிய செய்திகள்

தேனியில் இருந்து சபரிமலை  செல்ல ஒருவழிப்பாதை அமல்

தேனி, டிச.22- ஐயப்ப பக்தர்களின் வாகனங்களின் எண்ணிக்கை அதி கரித்துள்ளதால் தேனி வழியே சபரிமலை செல்வதற்கு ஒரு வழிப்பாதை வெள்ளிக்கிழமை காலை  முதல் அமல் படுத்தப்படுகிறது. சபரிமலை ஐயப்பன் கோயில் மரகஜோதி ஜனவரி 14 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக வெளி  மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள்  தேனி வழியே அதிகளவில் சென்று கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பக்தர்களின் வாகனங்கள் நெரிச லின்றி சென்று வர கம்பம்மெட்டு சாலையானது ஒரு வழிப்  பாதையாக மாற்றப்படுவது வழக்கம். இந்த ஆண்டும் 23.12.2022 முதல் 14.1.2023 வரை  இச்  சாலை ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இதன்படி வாகனங்கள் தேனியில் இருந்து சின்ன மனூர், கம்பம் சென்று பின்பு கம்பம்மெட்டு வழியே ஆமை யார், புளியமலை, கட்டப்பனை, குட்டிக்கானம், வாகமண், முண்டக்கயம்  எரிமேலி, பம்பை வழியே அய்யப்பன் கோயி லுக்குச் செல்லலாம். தரிசனம் முடிந்து திரும்பும் பக்தர்கள் பம்பை, குட்டிக் கானம், பீர்மேடு, பாம்பனாறு, வண்டிப்பெரியாறு, குமுளி, கூடலூர், கம்பம், சின்னமனூர் வழியே தேனியை கடந்து செல்லலாம்.  போக்குவரத்து வழித்தட மாற்றத்தினை ஒழுங்கு படுத்தவும், தகவல்களை தெரிவிக்கவும் போலீஸார் ஆங்காங்கே இதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தடுப்பூசி போட்ட குழந்தை இறப்பு போலீசார் வழக்கு பதிவு 

திண்டுக்கல், டிச.22- திண்டுக்கல் அருகே பிள்ளையார்நத்தம் கிராமத்தில் பிறந்து  52 நாட்களேயான ஆண் குழந்தை தடுப்பூசி போட்ட மறு நாள் மூக்கிலும், வாயிலும் ரத்தம் வழிய இறந்தது.  திண்டுக்கல் பிள்ளையார்நத்தத்தைச் சேர்ந்த ஆட்டோ தொழிலாளி விஜயகுமார். அவரது மனைவி சுகன்யா. இவர்  களுக்கு திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் ஆண் குழந்தை பிறந்தது. 52 நாட்களான குழந்  தைக்கு  குருபிரசாத் என்று பெயர் வைத்தார்கள். 45 நாட்க ளில்  தடுப்பூசி போட வேண்டும் என்பதற்காக ஆலம்பட்டி  ஊராட்சி அலுவலகம் அருகேயுள்ள ஆரம்ப சுகாதார நிலை யத்தில் புதனன்று சென்று தடுப்பூசி போட்டனர். அன்று இரவில் குழந்தைக்கு காய்ச்சல்  ஏற்பட்டுள்ளது. காலை யில் குழந்தையின் மூக்கிலும், வாயிலும் ரத்தம் கசிந்து இறந்துள்ளது. இதனால் பதறிப்போன பெற்றோர் திண்டுக்  கல் அரசு மருத்துவமனைக்கு குழந்தையுடன் வந்தனர். பரி சோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்துவிட்டதாக  தெரி வித்தனர். இதனையடுத்து குழந்தையின் உறவினர்கள் மருத்துவமனை முன்பாக திரண்டனர். இதுதொடர்பாக திண்டுக்கல் தாலுகா காவல்நிலையத்தில் வழக்கு பதி யப்பட்டு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

பயிர் கடன் வழங்குவதில்  முறைகேடு வருசநாட்டில் கூட்டுறவு சங்கம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கடமலைக்குண்டு, டிச.22- வருசநாட்டில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அ.தி.மு.க ஆட்சியின் போது அறிவிக்கப்பட்ட விவ சாயிகள் பயிர் கடன் தள்ளுபடிக்கு வருசநாடு கூட்டுறவு சங்கத்தில் 627 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். அதில் 300 பனாளிகளுக்கு மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. எஞ்சிய 327 பயனாளிகளுக்கு தற்போது வரை பயிர்கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. இது தொடர்பாக வருசநாடு பகுதியை சேர்ந்த விவசாயிகள்  ஆர்ப்பாட்டம், கூட்டுறவு சங்க அலுவலகம் முற்றுகை உள்ளிட்ட போராட்டங்களில் தொடர்ந்து ஈடுபட்டும் கடன்  தள்ளுபடி தொடர்பாக தற்போது வரை எந்தவித நடவ டிக்கையும் எடுக்கப்படவில்லை.‌ இந்நிலையில்  திங்கள்கிழமை வருசநாடு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கூட்டுறவு சங்கத்தில் நகை மற்றும் விவ சாய கடன்களில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறு வதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக அனைத்து விவசாயிகள் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப் பட்டது. அதன்படி வருசநாடு பகுதியை சேர்ந்த 50-க்கும்  மேற்பட்ட விவசாயிகள் புதன்கிழமை காலை கூட்டுறவு  சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடு பட்டனர். அப்போது கூட்டுறவு சார்பதிவாளர் சவுந்தர ராஜன் மற்றும் வருசநாடு போலீசார் விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். அதில் அரசு பயிர் கடன் தள்ளுபடி செய்ததில் முறைகேடுகளில் ஈடுபட்ட வருசநாடு கூட்டுறவு வங்கி பணியாளர் மற்றும் இணை பதிவாளர்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கூட்டுறவு  அலுவலகத்தில் மாடு பராமரிப்பு மற்றும் விவசாய கடன்  வழங்குவதற்கு விவசாயிகளிடம் வசூல் வேட்டை நடத்  தப்படுவதாகவும், நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்ட 280  விவசாயிகளிடம் 10 சதவீதத்திற்கு மேல் கமிஷன் பெறப்  பட்டதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்தனர். 3 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின்பு அரசுக்கு தெரியப்படுத்தி விரைவில் அனைத்து விவசாயிகளுக்கும் நகை கடன்  தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்  சார்பதிவாளர் தெரிவித்தார். மற்ற புகார்கள் மீது விசா ரணை மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார். இதை யடுத்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். நட வடிக்கை எடுக்கப்படவில்லை எனில் வருகின்ற 5ம் தேதி  மீண்டும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

இன்றைய நிகழ்ச்சி

திண்டுக்கல் அய்யலூரில் சிபிஎம் வடமதுரை ஒன்றியக்குழு உறுப்பினரும்,  விவசாயத் தொழி லாளர் சங்க முன்னாள் மாவட்டப் பொருளாளருமான ஆர்.கண்ணன் படத்திறப்பு நிகழ்ச்சி. டிசம்பர் 23 மாலை 5 மணி. பங்கேற்பு: மாநில  செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம், மாநிலக்குழு உறுப்பினர் என்.பாண்டி, மாவட்டச்செயலாளர் ஆர்.சச்சிதா னந்தம்

ரயில் மோதி முதியவர் பலி 

திருவில்லிபுத்தூர்,டிச.23-   விருதுநகர் மாவட்டம் ,திருவில்லிபுத்தூர் அருகே உள்ள நூர்சாகிபுரம் காளியம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் காளியப்பன் (வயது 77). இவர் இந்த ஊரில் உள்ள அம்மன் கோவிலில் பூசாரியாக இருந்து வந்தார்  இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு காளியப்பன், இனாம் கரிசல்குளம் அருகே விநாயகா ரைஸ் மில்லுக்கு பின்புறம்  உள்ள தண்டவாளத்தில் இரத்த வெள்ளத்தில் இறந்து  கிடந்தார். திருவில்லிபுத்தூர் ரயில்வே காவல்துறையினர் காளியப்பனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவ மனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மதுரையில் பெண்கள்,மாணவிகள் மீதான  பாலியல் வன்முறைச் சம்பவங்கள் அதிகரிப்பு

கடும் தண்டனை வழங்க மாதர் சங்கம் வலியுறுத்தல்

மதுரை, டிச.22- மதுரை மாநகரில் கடந்த சில தினங்க ளாக பள்ளி, கல்லூரி மாணவிகள் மீது பாலி யல் ரீதியான வன்கொடுமை சம்பவம் அதி கரிக்க தொடங்கியுள்ளது என்று காவல் துறை அறிக்கைகள் தெரிவிக்கின்றது.  மதுரை மாநகரில் உள்ள மதுரை டவுன், மதுரை தெற்கு, தல்லாகுளம், திருப்பரங் குன்றம் ஆகிய 4 அனைத்து மகளிர் காவல்  நிலையங்களில் பெண்கள் மற்றும் குழந்தை களுக்கு எதிரான பாலியல் வன்முறை தொடர்பான வழக்குகள் கடந்த 34 மாதங்க ளில் 406 வழக்குகள்  பதிவு செய்யப்பட்டுள்  ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றது .  இந்த நிலையில் மேற்கண்ட 4 காவல்  நிலையங்களிலும் சிறுமிகளுக்கு எதிராக  பதிவான போக்சோ வழக்குகள் தொடர்பாக புள்ளி விவர பட்டியல் வெளியாகி உள் ளது. அதன்படி மதுரை மாநகரில்  கொரோனா ஊரடங்கு 2020 மார்ச்  முதல் பள்ளி, கல்  லூரி உட்பட கல்வி நிறுவனங்களுக்கு தொடர்விடுமுறை அளிக்கப்பட்டது.  மாண வர்கள் வீடுகளில் இருந்தபடி ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கின்றனர். பல மணி  நேரம் தனிமையில் இருப்பதால் மாணவ,  மாணவிகளின் கவனம் திசை திரும்பிவிடு கிறது. குறிப்பாக மாணவிகளுக்கு பாலியல்  ரீதியான சீண்டல்கள் அதிகரித்து வரு கின்றன. இதனால், பெற்றோர்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர் கொள்கின்றனர். மேலும், வறுமை காரணமாகவும், கடமை யை நிறைவேற்ற வேண்டும் என்ற எண் ணத்திலும் பெற்றோர்கள் தங்களுடைய பெண் குழந்தைகளுக்கு பள்ளி படிப்பை முடிக்கும் முன்  18 வயது நிரம்பாத நிலை யில்  திருமணம் செய்வதும் அதிகரித்து வந்  தது. இது தொடர்பாகவும் குழந்தைகள் மீதான பாலியல் சீண்டல் உள்ளிட்டு 132  வழக்குகளும், 2021-ம் ஆண்டு 124 வழக்கு களும், தற்போது  நடப்பு  ஆண்டு  2022 அக்டோபர் வரை 150 வழக்குகளும் பதிவாகி உள்ளது என்று காவல்துறை தரப்பில்  தக வல் வெளியிட்டுள்ளனர். 

பாலியல் சீண்டல் குறித்த விழிப்பு ணர்வை பள்ளி மற்றும் கல்லூரிகளில்  மக ளிர் காவல்துறையினர்  தீவிரமாக செய்து வருகின்றனர். இதுதொடர்பாக மாநகர காவல்துறை  உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “பெண் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாக தொந்த ரவு அளித்த 5-க்கும் மேற்பட்டோர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.  குழந்தை களுக்கு எதிரான பாலியல் வன்முறைச் சம்ப வங்களை தடுத்து நிறுத்தும் பொறுப்பு பெற்றோருக்கும் உள்ளது. எனவே அவர்கள் குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பாலியல் சில் மிஷம் தொடர்பாக குழந்தைகள் ஏதேனும்  புகார் தெரிவித்தால்  காவல்துறைக்கு உட னடியாக  தெரிவிக்க வேண்டும்” என்று கூறி னார்.  இது குறித்து அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்க மாநிலச்செயலாளர் ஆர். சசிகலா கூறுகையில், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலில் துன்புறுத்தல் குறித்து பல்வேறு விழிப்புணர்வு பிரச்சா ரங்களை ஜனநாயக மாதர் சங்கம் மாநில அளவில் செய்து வருகின்றோம். மதுரை மாவட்டத்தில் கடந்த காலங்களில் பாலி யல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் ,குழந்  தைகளின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து  அவர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க தயங்கினாலும் நாங்கள் உதவி கள் செய்து புகார் மனு கொடுத்து நட வடிக்கை எடுத்துள்ளோம். அப்படி இருந் தும் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர் நிகழ்  வாக உள்ளது. பணியிடங்கள் மற்றும் பள்ளி களிலும் பெண்கள் மீதான பாலியல்  சீண்டல் அதிகரித்து கொண்டுதான் உள்ளது.  இது போன்ற இடங்களில் அவர்களுடைய பாது காப்பை உறுதி செய்திட விசாகா கமிட்டி  அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலி யுறுத்தி வருகின்றோம். மேலும்  குற்றவாளி களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் அதுவும் கீழமை நீதிமன்றங்க ளில் இருந்து  உச்சநீதிமன்றம் வரை ஒரே மாதிரியான தண்டனை இருக்கவேண்டும் என்று தெரிவித்தார்.