districts

img

பற்றியெரியும் மணிப்பூரை உலக நாடுகள் கவனிக்கின்றன; மோடி மௌனமாக உள்ளார்

மதுரை, ஜூலை 18-  பற்றியெரியும் மணிப்பூர் மாநி லத்தை உலக நாடுகள் கவனிக்கின்றன; ஆனால் பிரதமர் மோடி மௌனமாக  உள்ளார் என்று மதுரை பொதுக்கூட்டத்  தில் கே.பாலபாரதி சாடினார். மணிப்பூர் மாநிலத்தில் நடைபெறு கின்ற கலவரத்தை தடுத்து நிறுத்த ஒன்றிய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிறிஸ்தவர்கள் மீதான கொலை வெறியாட்டத்தை தடுக்க வேண்டும். மத வேறுபாடின்றி அனைத்து மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பின் சார்பில் மதுரையில் பேரணி- பொதுக் கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு அமைப்பின் மதுரை மாநகர் மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் ந.ஜெயச்சந்திரன்  தலைமை வகித்தார். அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் பேரா.அருணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பி னரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பின ருமான கே.பாலபாரதி ஆகியோர் உரை யாற்றினர். மதுரை புறநகர் மாவட்ட  ஒருங்கிணைப்பாளர் உமாமகேஸ்வ ரன் நன்றி கூறினார். இதில் கே.பாலபாரதி பேசுகையில், மணிப்பூரில் கலவரத்தால் எரியக்கூடிய நெருப்பை அணைப்பதற்கு பதிலாக  பிரதமர் மோடி பிரான்சுக்கும் அமெ ரிக்காவுக்கும் சென்றுகொண்டிருக்கி றார். மணிப்பூரை எல்லா நாடுகளும் பார்த்து கொண்டிருக்கின்றன. ஆனால்  பிரதமர் மோடி மட்டும் மவுனமாக உள்  ளார்.

தமிழகத்தில் அனைத்து மதங்க ளையும் சார்ந்துள்ள மக்கள் ஒன்று பட்டு மணிப்பூர் மக்களுக்காக குரல்  கொடுக்கிறோம். சமாதானத்தை, அமைதியைக் கொண்டு வருவதற்கு அங்கு இடதுசாரி சக்திகளும் காங்கி ரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டோ ரும் உயிரையும் பொருட்படுத்தாமல் களத்திலே நிற்கிறார்கள். அங்கு காணாமல் போனவர்கள் பாஜக கூட்டம்தான். மணிப்பூர் மக்களுக்காக ஒன்றுபட்டு ஆதரவு தெரிவிப்போம் என்றார்.  பேரா.அருணன் பேசுகையில், மணிப்பூரில் மனிதநேயம் செத்துக்  கிடக்கிறது. மணிப்பூரை மயா னப்பூர் ஆக்கியவர்கள் ஆர்எஸ்எஸ் பரி வாரத்தினர், பாஜக ஆட்சியாளர்கள். மணிப்பூரில் 357 தேவாலயங்கள் எரிக்கப்பட்டிருக்கின்றன. போத கர்களுடைய இல்லங்கள் மற்றும் அலு வலகங்கள் எரிக்கப்பட்டிருக்கின்றன என்று, இவற்றையெல்லாம் பட்டிய லிட்டு பாஜக மிசோரம் மாநில துணைத் தலைவரே கூறியிருக்கிறார். இவர், மணிப்பூர் கொடூரத்தைக் கண்டித்து ராஜினாமா செய்திருக்கிறார்.  நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முஸ்லிம்களையும் கிறிஸ்த வர்களையும் ஒடுக்கினால், அடுத்து இந்துக்களில் இருக்கக் கூடிய எஸ்.சி. /பி.சி.பிரிவினரை இந்த கூட்டம் ஒடுக் கும். ஒடுக்கப்பட்ட இந்துக்களை எல்லாம் ஒடுக்கும் இந்தக் கூட்டம். சாதாரண மக்கள் எல்லா சாமிகளை யும் வேண்டுவார்கள்! சர்ச்சுக்கு போவார்கள்! பள்ளிவாசல் சென்று  தொழுகை செய்வார்கள். கோவிலுக்கு  சென்று வழிபாடும் செய்வார்கள். இந்த  மதநல்லிணக்கம் தான் நமக்கு தேவை  என்றார்.