விருதுநகர், மே.10- தமிழக அரசு, மாநகராட்சி, நக ராட்சி மற்றும் பேரூராட்சிகளில் 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை சொத்து வரியை உயர்த்த முடிவு செய்துள்ளது. இந்நிலையில், இதற் கான ஆட்சேபணை மனுக்களை வரும் மே,13 வரை வழங்கலாம் என சம்பந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வா கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தநிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் விருதுநகர் மாவட்டம் முழுவதும் சொத்து வரி உயர்வை ரத்து செய்யக் கோரி மனுக் கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. சிவகாசி மாநகராட்சி முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு நகர் செயலாளர் ஆர்.சுரேஷ்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.முரு கன் கண்டன உரையாற்றினார். சிஐ டியு தலைவர்கள் ஜே.லாசர், இ. பழனி, ஜோதிமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். விருதுநகர் நகராட்சி அலுவல கம் முன்பு நடைபெற்ற போராட்டத் திற்கு நகர்மன்ற உறுப்பினர் கே. ஜெயக்குமார் தலைமை வகித்தார். நகர் செயலாளர் எல்.முருகன் துவக்கி வைத்தார். ஜேசிடியு செய லாளர் தேனிவசந்தன் கண்டன உரை யாற்றினார். மாவட்டக்குழு உறுப்பி னர் பி.நேரு, சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் பி.ராமர் உட்பட பலர் பங்கேற்றனர்.
சாத்தூரில் நகர்மன்ற உறுப்பி னர் எஸ்.தெய்வானை தலைமை யில் நகர் செயலாளர் பெத்தராஜ் துவக்கி வைத்தார். மாவட்டக்குழு உறுப்பினர் கே,விஜயகுமார் கண் டன உரையாற்றினார். நகர்க்குழு உறுப்பினர் சீனிவாசன் உள்ளிட் டோர் பங்கேற்றனர். காரியாபட்டி பேரூராட்சி அலு வலகம் முன்பு வட்ட செயலாளர் ஏ. அம்மாசி தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.முத் துக்குமார் கண்டன உரையாற்றி னார். மேலும் இதில் வட்டக்குழு உறுப்பினர்கள் முகமது அலி ஜின்னா, ஏ.குமராண்டி, மாரிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர். மல்லாங்கிணறு பேரூராட்சி அலுவலகம் முன்பு சிஐடியு தலை வர் எம்.பரமசிவம் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி. முருகன் கண்டன உரையாற்றினார். வி.வி.இருளன், சிவபாக்கியம் உள் ளிட்டோர் பங்கேற்றனர். இராஜபாளையத்தில் நகர்க் குழு உறுப்பினர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். நகர செயலா ளர் மாரியப்பன் விளக்கிப் பேசினார். திருவில்லிபுத்தூரில் நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்திற்கு நகர்க்குழு உறுப் பினர் பிரபு தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் கே . அர்ஜு னன் விளக்கி பேசினார் . கட்சித் தலை வர்கள் நகர்மன்றத் தலைவர் தங்கம் ரவி கண்ணனிடம் மனுக்களை வழங்கினர். ராஜபாளையம் மேற்கு ஒன்றியம் செட்டியார்பட்டி சேத்தூர் பேரூராட்சி அலுவலகங்கள் முன்பு மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற்றது .கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் குருசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் ராமர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். புதுப்பட்டி பேரூராட்சியிலும் மனு கொடுக்கும் இயக்கம் நடைபெற் றது.