districts

img

தனியார் மதுபானக் கூடத்தை அகற்ற வேண்டும் ஆதார், குடும்ப அட்டைகளை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க மக்கள் முடிவு

விருதுநகர், ஜன.3- விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே உள்ள அன்னபூரணியாபுரம் கிராம மக்கள் தங்களது குடியிருப்பு அருகே அமைக்கப்பட்டுள்ள தனி யார் மதுபானக் கூடத்தை அகற்ற வேண்டும்.இல்லையெனில் ஆதார், குடும்ப அட்டைகளை ஒப்படைக்க உள்ளோம் என மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாத ரெட்டியிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதுகுறித்து அம்மனுவில் கூறியுள்ளதாவது: வெம்பக்கோட்டை வட்டம், செவல்பட்டி அருகே உள்ளது அன்னபூரணியாபுரம். இங்கு 200 குடும்பத்தினர் வசித்து வரு கிறோம். இங்கு, கோவில், அர சினர் மேல்நிலைப் பள்ளி, தனி யார் ஐடிஐ ஆகியவற்றின் அருகே தனியார் மதுபானக் கூடம் கடந்த டிசம்பர் 31 அன்று தொடங்கப் பட்டுள்ளது. இதை எதிர்த்து கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் 5 முறை மனு அளித்துள்ளோம். பலகட்ட போராட்டங்களையும் நடத்தியுள்ளோம். மதுபானக் கூடத்தால் இளைஞர்கள் வாழ்க்கை சீரழிவதோடு சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே, தனியார் மதுபானக் கூடத்திற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும். அல்லது எங்களது ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டைகளை திரும்ப ஒப்படைப்போம். இவ்வாறு மனுவில் குறிப் பிட்டுள்ளனர்.