மதுரை, செப்.12- மதுரை மீனாம்பாள்புரத்தில் உள்ள கம்யூனிஸ்ட் இயக்க தலை வர் சக்கரை செட்டியார் படிப்பக ஸ்தாபகர்களில் ஒருவரான எஸ். அழகு (எ) மார்க்கண்டன் சனிக் கிழமையன்று காலமானார். இவர், மறைந்த மூத்த பத்திரி கையாளர் சௌந்தரபாண்டி யனின் (சௌபா) தந்தை ஆவார். அன்னாரது மறைவுச் செய்தியறிந்து மீனாம்பாள்புரம் சத்தியமூர்த்தி நகர் 2 வது தெரு சங்கர் லைனில் உள்ள அவரது இல்லத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலக்குழு உறுப்பினர் இரா.விஜயராஜன், பகு திக்குழு செயலாளர் ஏ.பாலு, மாவட்டக்குழு உறுப்பினர் பி. ராதா ஆகியோர் நேரில் சென்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இறுதி நிகழ்ச்சி ஞாயிறன்று நடைபெற்றது.