districts

img

திருத்தங்கல் பகுதியில் அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரி சிபிஎம் முற்றுகை

சிவகாசி, நவ.21-  சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட திருத்தங்கல் பகுதியில் மக்களின் அடிப் படை பிரச்சனைகளை தீர்த்திடக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முற்றுகைப் போராட்டம் நவம்பர் 21 அன்று நடத்தப்பட்டது. பின்பு, நடைபெற்ற பேச்சு வார்த்தையில் அனைத்து கோரிக்கை களையும் நிறைவேற்றித் தருவதாக மாநக ராட்சி நிரவாகத்தினர் உறுதியளித்தனர். சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்டது திருத்தங்கல் பகுதி. இங்குள்ள பெரும் பாலான குடியிருப்புகளுக்கு குடிநீர் முறை யாக வழங்கப்படுவதில்லை. மேலும், ஏராளமான பொது கழிப்பிடங்கள் பூட்டியே உள்ளன. இதனால் பெண்கள் திறந்த வெளி யை கழிப்பிடமாக பயன்படுத்தும் அவல நிலை உள்ளது. மேலும், குளங்கள், ஊரு ணிகள் மற்றும் கண்மாய்கள் அனைத்தும் கழிவு நீரைத் தேக்கி வைக்கும் பகுதிகளாக மாறியுள்ளன. அதில் பன்றிகள் மேய்ந்து வருகின்றன. இதனால், அப்பகுதி முழு வதும் பெரும் சுகாதாரச் சீர்கேடு நிலவி வருகிறது. மேலும், குடிநீர் குழாய்க்காக தோண்டப்பட்ட பல்வேறு சாலைகள் சீர் செய்யப்படவில்லை.

இதனால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வரு கின்றனர். எனவே, குடிநீர், கழிப்பிடம், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் திருத்தங்கல்லில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து,  மாநகராட்சி நிர்வா கத்தினர், பேச்சுவார்த்தைக்கு அழைத்த னர். முடிவில், 10வார்டு பகுதிகளின் கோரிக்கைகளில்  சில   உடனடியாகவும் மீதமுள்ள கோரிக்கைகள் ஜனவரி மாத  இறுதிக்குள்ளும் செய்து தரப்படும் எனவும்,   கொடுத்த மனுக்களுக்கு ஓரிரு நாட்களில்  பல்வேறு விபரங்களுடன் பதில் வழங்கப் படும் என உறுதியளித்னர்.இதையடுத்து, போராட்டம்  தற்காலிகமாக ஒத்திவைக்கப்  பட்டது. முன்னதாக நடைபெற்ற பேச்சு வார்த்தையில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.என்.தேவா, கே.முரு கன், ஒன்றிய செயலாளர் பி.பாலசுப்பிர மணியன், நகரச் செயலாளர் ஆர்.சுரேஷ் குமார்,  முத்துச்சாமி,  சங்கரய்யா முத்து ராஜ்,  மாரிச்சாமி,  ஜெயசுதா பாக்கியம் வேல்  முருகன் குணசேகரன் மற்றும் 10 வார்டு களைச் சேர்ந்த பொதுமக்கள் பலர் பங் கேற்றனர்.