விருதுநகர், ஆக.28- விருதுநகரில் நடைபெறும் குறைதீர் கூட்டத்திற்கு வருகை தரும் மக்களுக்கு இலவசமாகக் கோரிக்கை மனு எழுத ஆட்சி யர் ஜெயசீலன் ஏற்பாடு செய்துள்ளார். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் திங்கள் கிழமை தோறும் குறை தீர் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில், இலவச குடிமனைப்பட்டா, குடிநீர், மின் வசதி, சாலை வசதி ஆகிய அடிப்படை வசதி கள் கோரியும், இலவச தையல் இயந்திரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக வும் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராள மான மக்கள் வருகின்றனர். இவர்களில் பலருக்கு மனு எழுதும் முறைபற்றி தெரிவதில்லை. இதனால், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் வெளியே மனு எழுதித் தரும் சிலரை நாடு கின்றனர். ஆனால், எழுதித் தருபவர்களோ உரிய முறையில் நேர்த்தியாக மனுவை எழு துவதில்லை. ஒரு மனு எழுதித் தருவ தற்குக் குறைந்தபட்சம் ரூ.30 முதல் ரூ.100 வரை மக்களிடம் பேரம் பேசி வாங்குவதா கத் தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இதையடுத்து ஆட்சியர் ஜெயசீலன், குறைதீர் கூட்டத்திற்குக் கோரிக்கை மனு வழங்க வரும் மக்களுக்கு இலவசமாக மனுக்களை எழுதித் தர சில தொண்டு நிறு வனங்களை ஏற்பாடு செய்துள்ளார்.