districts

காவல்நிலையத்தில் இருந்து இரத்தத்துடன் ஜெயராஜ், பென்னிக்ஸ் வெளியில் வந்தனர் நீதிமன்றத்தில் தலைமைக்காவலர் சாட்சியம்

மதுரை, ஏப்.7-  சாத்தான்குளம் காவல்நிலையத்தில் இருந்து இரத்தத்துடன் ஜெயராஜ், பென்  னிக்ஸ் வெளியில் வந்ததாக முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஓட்டுநரான தலை மைக்காவலர் ஜெயசேகர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்தார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்  குளத்தை சேர்ந்த வணிகர்களான ஜெய ராஜ்,இவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறையால் விசாரணைக்கு அழைத் துச்செல்லப்பட்டனர். காவல்துறையினர் கொடூரமாக தாக்கியதில் இருவரும் உயிரி ழந்தனர்.  இந்த வழக்கில் சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வா ளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள் ளிட்ட 9 பேரின் மீது சிபிஐ தரப்பில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை யானது வியாழனன்று மதுரை மாவட்ட முத லாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி பத்ம நாபன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக் கின் சாட்சியாக முன்னாள் காவல் ஆய்வா ளர் ஸ்ரீதரின் ஓட்டுநரான தலைமைக்காவலர் ஜெயசேகர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதர் பணியின் போது ‘‘போலீஸை பகைச்சிகிட்ட எவனும் வெளியே போகக்கூடாது; அவர்களை அடிக்க வேண்டும்’’ என்று கூறியதாகவும், தான் காவல்துறை வாகனத்தின் அருகே நின்றுகொண்டிருந்த போது தொடந்து காவல்நிலையத்தில் உட்புறத்தில் இருந்து கதறல் சத்தம் கேட்டதாகவும் கூறினார்.  இதனையடுத்து மறுநாள் காலை பார்க்கும் போது ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரின் உடல் மற்றும் ஆடையின் இதர பகுதியில் இரத்தம் இருந்த தாகவும் பரபரப்பு சாட்சியம் அளித்துள்ளார். இதனையடுத்து இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை 18ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.  இதனிடையே ஜாமீன் வழங்கக் கோரி முன்னாள் ஆய்வாளர் ஸ்ரீதர் தொடர்ந்து ஜாமீன் மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.