districts

img

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகைளுக்கான சங்கத்தின் கன்னியாகுமரி மாவட்ட துணை தலைவராக செயல்பட்டு வந்த சந்திரசேகர் முதலாம் ஆண்டு நினைவு தினம் புதனன்று (மே 18) கடைப்பிடிக்கப்பட்டது. உண்ணாமலைக்கடையில் அவரது நினைவிடத்திலும், ஜங்சனில் படத்திற்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் சங்கத்தின் மாவட்ட தலைவர் சார்லஸ், செயலாளர் மனோகர் ஜஸ்டஸ், ராமச்சந்திரன், சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி, செயற்குழு உறுப்பினர் தங்கமோகன், மூத்த தலைவர் கே.மாதவன் உள்ளிட்ட ஏராளமானோர் கொட்டும் மழையிலும் அஞ்சலி செலுத்தினர்.