உலக புத்தக தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் போகலூர் கிளை சார்பாக சத்திரக்குடியில் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடைபெற்றது. வெற்றிபெற்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் மருத்துவர் வான் தமிழ் இளம்பரிதி புத்தகங்களை வழங்கினார். அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் கு. காந்தி, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஜோ.இரவி , வட்டார வளமைய மேற்பார்வையாளர் டி. திலகராஜ், சத்திரக்குடி நூலகர் செல்வ பூவதி ஆகியோர் பேசினர்.