districts

img

பேச்சுப்போட்டி என்ற பெயரில் பாஜகவினருக்கு வித்யாபார்த்தி பள்ளி அனுமதி!

திண்டுக்கல், ஜுலை 23- மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடத்துவதாகக் கூறி திண்  டுக்கல் வித்யா பார்த்தி பள்ளி நிர்வா கம் பாஜகவினருக்கு கொடுத்த அனுமதியை ரத்து செய்யக் கோரி  இந்திய மாணவர் சங்கம் சார்பில் முதன்மைக் கல்வி அலுவலரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.  திண்டுக்கல் மாவட்டம் சீலப் பாடியில் உள்ள வித்யாபார்த்தி மேல்நிலைப்பள்ளியில் ஜூலை 23, 24 ஆகிய தேதிகளில் பாஜக சார்பாக பேச்சுப்போட்டி நடத்த திட்  டமிட்டுள்ளனர். பொதுவாக அரசி யல் கட்சிகள் நடத்தும் நிகழ்ச்சி களுக்கு பள்ளிகளில் அனுமதி கொடுப்பதில்லை. ஆனால் வித்யா பார்த்தி பள்ளி நிர்வாகம் சமீபகால மாக பாஜக கட்சி நிகழ்ச்சிகளுக்கு மட்டும் அனுமதி கொடுக்கிறது. எனவே இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுக்கக்கூடாது என்று வலி யுறுத்தி இந்திய மாணவர் சங்கத்  தின் மாவட்டச்செயலாளர் முகேஷ்  மாவட்ட முதன்மைக் கல்வி அலுவ லரை அலுவலகத்தில் நேரில் சந்  தித்து மனுக்கொடுத்தார். வாலிபர் சங்க மாவட்டச்செயலாளர் பாலாஜி உடனிருந்தார்.  

மனுவை முதன்மைக் கல்வி அலுவலர் பெற்றுக்கொண்டு நட வடிக்கை எடுப்பதாக உறுதியளித் தார். இது தொடர்பாக முகேஷ் கூறுகையில், வித்யாபார்த்தி பள்ளி நிர்வாகம் தொடர்ச்சியாக அவர்க ளது பள்ளியில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். போன்ற மதவெறி அமைப்புகளின் நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்கிறார்கள். கடந்த  மார்ச் மாதம் கூட நீட் தேர்வுக்கு ஆத ரவாக இயக்கம் என்ற பெயரில் நடத்த அனுமதித்தனர். இதுகுறித்து அப்போதைய முதன்மைக் கல்வி அலுவலரிடம் இந்திய மாணவர் சங்கம் சார்பாக கொடுத்த புகாரை யடுத்து அது தனியார் மண்டபத்தில் நடத்தப்பட்டது. இதுபோல் தொடர்ச்சியாக ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜக நிகழ்ச்சி  களை நடத்தும் இப்பள்ளி நிர்வா கத்தின் மீது நடவடிக்கை எடுக்க அரசு முன்வர வேண்டும். மேலும்  பாஜக, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நடத்தும் இதுபோன்ற நிகழ்ச்சி களுக்கு பள்ளி வளாகத்தில் அனு மதியளிக்கக்கூடாது. எனவே இந்த  பேச்சுப்போட்டி நிகழ்ச்சியை உட னடியாக ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்தார். மாணவர் சங்க  மாவட்டத்தலைவர் செல்வமுரு கன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் தமிழ்ச்செல்வன்,ஈஸ்வரன், வாலி பர் சங்க நகரத்தலைவர் அஜீத் ஆகி யோர் கலந்து கொண்டனர். (நநி)