districts

img

ஒன்றிய - மாநில அரசுகள் வரி உயர்வை கைவிட வேண்டும்

ஒன்றிய - மாநில அரசுகள் வரி உயர்வை கைவிட வேண்டும், மின்கட்டன உயர்வை ரத்து செய்திட வேண்டும். மதுரை முழுவதும் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பள தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை ஜெய்ஹிந்த்புரம் ஜீவாநகர் 1 வது தெருவில் தெருமுனை பிரச்சாரக்கூட்டம் நடைபெற்றது. எம். பாலமுருகன் தலைமை வகித்தார். சி. சுப்பையா துவக்கிவைத்து பேசினார், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர். தெய்வராஜ், மாநில துணைச் செயலாளர் கே. திருச்செல்வன் ஆகியோர் உரையாற்றினர். 

;