districts

img

சிவகங்கை சாம்பவிகா பள்ளியில் மாநில குத்துச்சண்டை போட்டி: அமைச்சர் பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார்

சிவகங்கை, ஜன.29- தமிழ்நாடு முழுவதும் பள்ளிக்கல்வித்துறையின் சார்பாக பாரதியார் தினத்திலும் , குடியரசு தினத்  தன்றும் குத்துச்சண்டை விளையாட்டுப் போட்டி கள் மாவட்ட அளவில் நடைபெற்றது. இப்போட்டி யில்  முதன்மை பெற்றவர்களுக்கு மாநில அளவி லான போட்டி சிவகங்கையில் உள்ள சாம்பவிகா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. 18 மாவட்டங்க ளில் இருந்து மொத்தம் 2600 மாணவ, மாணவிகள் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்றனர்.  போட்டியை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் துவக்கி வைத்து, பங்கேற்ற  மாணவர்களை பாராட்டி வாழ்த்தினார் . இப்போட்டியில் முதன்மை பெறுபவர்களுக்கு முதல் பரிசு தங்கமும், இரண்டாம் பரிசு வெள்ளியும், மூன்றாம் பரிசு வெண்கல பதக்க மும் வழங்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் கூறி னார்.  விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மதுசூதன் ரெட்டி தலைமை வகித்தார் . ஆவின் பால்வள தலை வர் சேங்கைமாறன், சிவகங்கை நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த்,காஞ்சிரங்கால் ஊராட்சி மன்ற  தலைவர் மணிமுத்து, சாம்பவிகா மேல்நிலைப் பள்ளி தாளாளர் சேகர் ,திமுக ஒன்றிய செயலாளர் ஜெயராமன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இவ் விழாவில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் மதுசூதன்ரெட்டியிடம் திமுக ஒன்றிய செய லாளர் ஜெயராமன் பேசுகையில், சிவகங்கை  ஒன்றியத்தில் கீழக்கண்டனி, வாணியங்குடி,அர சனூர் ஆகிய ஊர்களில் கடந்த ஆண்டு நெல்கொள் முதல் நிலையம் தொடங்கப்பட்டது.  இந்த ஆண்டும் அதே இடத்தில் நெல் கொள்முதல் மையம் திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். மாவட்ட ஆட்சியர் பரிசீலனை செய்வதாக கூறினார்.