districts

img

மறைசாட்சி தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம்: குமரி தேவாலயங்களில் சிறப்பு வழிபாடு

நாகர்கோவில், மே 15- குமரி மாவட்டத்தைச் சேர்ந்த மறைசாட்சி தேவசகாயத்துக்கு வாட்டிகன் நகரில் போப்  பிரான்சிஸால் புனிதர் பட்டம் வழங்கப் பட்டது. அதையொட்டி குமரி கிறிஸ்தவ ஆல யங்களில் ஞாயிறன்று (மே 15) சிறப்பு வழி பாடு நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டம் நட்டா லத்தைச் சேர்ந்தவர் மறைசாட்சி தேவசகா யம். நீலகண்டன் என்ற இயற்பெயரை கொண்ட இவர், 1745ஆம் ஆண்டு தேவசகா யம் என்ற பெயரில் திருமுழுக்கு பெற்று  கிறிஸ்தவராக மாறினார். 1752ஆம் ஆண்டு  ஆரல்வாய்மொழியில் உள்ள காற்றாடி மலையில் சுட்டுக் கொல்லப்பட்டார். அற்பு தங்கள் நிகழ்த்தியதாக கூறப்படும் தேவசகா யம் அருளாளராக அறிவிக்கப்பட்டார். இந்த  நிலையில் ஞாயிறன்று (மே 15) அவருக்கு வாடிகனில் போப் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்கினார். இந்த விழாவில், மத்திய, மாநில அரசின் பிரதிநிதிகள், பேராயர்கள், ஆயர்கள் கலந்து கொண்டனர். தேவசகாயம் காற்றாடி மலையில் சுட்டுக் கொல்லப்படுவதற்கு முன்பு நாகர்கோவில் மேலராமன்புதூரில் சிறை வைக்கப்பட்ட தாக கூறப்படுகிறது. தேவசகாயத்திற்கு புனி தர் பட்டம் வழங்கப்படுவதை யொட்டி அவர் சிறை வைக்கப்பட்ட மேலராமன்புதூரில் அமைக்கப்பட்டுள்ள தேவாலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.  அதனைத் தொடர்ந்து தேவசகாயத்தின் சிற்பத்தை தேவாலயத்தை சுற்றிலும் பவனி யாக மக்கள் சுமந்து வந்தனர். இதில் ஏரா ளமான கிறிஸ்தவ மக்கள் ஊர்வலமாக சென்றனர். நாகர்கோவில் கோட்டார் சவேரி யார் ஆலயத்தில் ஞாயிறன்று காலை சிறப்பு திருப்பலி நடந்தது. முன்னாள் பிஷப் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமையில் நடந்த பிரார்த்த னையில் ஆலய பங்கு தந்தை ஸ்டான்லி சகாயசீலன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து அங்குள்ள  தேவ சகாயம் கல்லறைக்கு பீட்டர் ரெமிஜி யூஸ் மலர் அஞ்சலி செலுத்தினார். இதேபோல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தன. ரோமில் நடைபெறும் புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் தமிழக தகவல் தொழில்நுட்ப வியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்றார். புனிதர் பட்டம் வழங்கும் நிகழ்ச்சியைபல்வேறு கிறிஸ்தவ ஆல யங்களில் அகண்ட திரையில் ஒலிபரப்பி னர்.