districts

img

தனியார்யமத்தை கண்டித்து பி.எஸ்.என்.எல் ஊழியர்கள் மனிதச் சங்கிலி போராட்டம்

விருதுநகர், செப்.16-  ஒன்றிய பாஜக அரசானது, பொ துத்துறை நிறுவனமான பி.எஸ். என்.எல் கோபுரங்கள்  மற்றும் கண்ணாடி இழைக் கேபிள்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை கண்டித்து  போராட்ட ஒருங்கி ணைப்புக்குழு சார்பில் விருதுநக ரில் மனிதச் சங்கலி போராட்டம் நடைபெற்றது. விருதுநகர் பாரத ஸ்டேட் வங்கி முன்பு நடைபெற்ற இப்போராட் டத்திற்கு ஒருங்கிணைப்புக்குழு தலைவர் புளுகாண்டி தலைமை தாங்கினார். துவக்கி வைத்து பி.எஸ்.என்.எல்.இ.யு மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் பேசினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலாளர் குருசாமி, அதிகாரிகள் சங்கத்தின் சார்பில் அசரப்தீன், மாநில உதவி தலைவர் சமுத்தி ரக்கனி, ஒப்பந்த ஊழியர் சங்க  மாவட்ட செயலாளர் எம்.முத்துச் சாமி ஆகியோர்  பேசினர். முடிவில்,  ஏ.ஐ.பி.டி.பி.ஏ மாநில உதவித் தலைவர் எம்.பெருமாள்சாமி கண்டன உரையாற்றினார். இதில் ஏராளமான ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

;