districts

2750 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

தூத்துக்குடி, மார்ச் 25 விளாத்திகுளம் அருகே கூரியர் வேனில் கடத்தப்பட்ட 2750 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடிவருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் அம்பேத்கர் தெருவில் ரேஷன் அரிசி கடத்தப்படு வதாக புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த வழி யாக வந்த தனியார் கூரியர் வேனை போலீசார் தடுத்து  நிறுத்தினர். போலீசாரை பார்த்தவுடன் அந்த வேனில் இருந்த 3 பேர் தப்பி ஒடிவிட்டனர். வேனுக்குள் இருந்த ஒரு வரை போலீசார் பிடித்து போலீசார் விசாரணை நடத்திய போது முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தார். இதை தொடர்ந்து அந்த வேனில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது வேனுக்குள் சட்டவிரோதமாக 2750 கிலோ எடை கொண்ட 54 மூட்டை ரேஷன் அரிசி கடத்தப் பட்டது தெரிய வந்தது. இது தொடர்பாக பிடிபட்டநபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர் கோவில்பட்டியை சேர்ந்த ராமர் பாண்டியன் மகன் ராஜா(வயது 30) என்பது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.