அழிக்காலில் மீண்டும் வீடுகளுக்குள் புகுந்த கடல் நீர் கழிப்பறைகளும் மணலில் புதையுண்டதால் அவதி தூண்டில் வளைவு அமைத்து மக்களை பாதுகாத்திட சிபிஎம் வலியுறுத்தல்
நாகர்கோவில், ஜுலை 3- குமரி மாவட்டம் அழிக்கால் கடற் கரை கிராமத்துக்குள் கடல் நீர் புகுந் தது. வீடுகளுக்குள் கழிப்பறை உட் பட மணல் நிரம்பியதாலும் வீட்டு உப யோக பொருட்கள் நீரில் மூழ்கி மண லில் புதையுண்டதால் மக்கள் அவ திப்பட்டு வருகின்றனர். கடல் சீற்றம் ஏற்படும் போதெல்லாம் ஏற்படும் மரண பீதியைப் போக்க தூண்டில் வளைவு அமைத்து மக்களை பாது காக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் சூறா வளிக் காற்றும் கடல் சீற்றமும் அதிக ரித்து காணப்படும். அப்போது ஆக்ரோஷமாக எழும் அலையால் கடல்நீர் ஊருக்குள் புகுந்து வீடுகள் சேதமடைவது வழக்கம். இதில் ஒவ் வொரு ஆண்டும் அழிக்கால் கடற் கரை கிராமம் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது. இந்த ஆண்டு கடல் சீற்றம் வழக்கத்தை விட ஆக் ரோஷமாக காணப்படுகிறது. அழிக் கால் கிராமத்தில் சனியன்று காலை யில் கடல்நீர் ஊருக்குள் புகுந்தது. பெரும் சீற்றத்துடன் எழுந்த அலை தண்ணீருடன் மணலையும் சுமந்தபடி வீடுகளுக்குள் புகுந்தது. இதில் வீட் டில் இருந்த தட்டு, முட்டு சாமான்கள், சோபாக்கள் உள்ளிட்டவை நீரில் மிதந்தன. தண்ணீருடன் மணலையும் அலைகள் அள்ளிச் சென்றதால் வீடு களை சுற்றி மணல் குவியல், குவிய லாக நிரம்பியுள்ளது. இதில் ஒரு சில வீடுகள் பாதி அளவு மண்ணுக்குள் புதைந்த நிலையில் காணப்படுகின் றன. இதனை தொடர்ந்து மீண்டும் கடல்நீர் வீடுகளுக்குள் புகுந்து விடா மல் இருப்பதற்காக வீட்டு முன்பு மணல் மூடைகளை அடுக்கி வைக் கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டனர். கடல்நீர் அழிக்கால் கிராமத்தில் புகுந் ததில் கீழத்தெரு, மேலத்தெரு, நடுத் தெருவில் உள்ள சுமார் 75 வீடுகள் பாதிப்பை சந்தித்தன. இதனால் அங்கு வசித்த அனைவரும் பாது காப்பு கருதி உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்தனர்.
மேலும் சிலர் அங்குள்ள மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். சீற்றத்தால் வீட் டில் இருந்த டி.வி., வாஷிங்மெஷின், பிரிட்ஜ் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் சேதமடைந்தன. இதேபோல் குமரி மாவட்ட மேற்கு கடற்கரை பகுதியான மேல் மிடாலம் மீனவ கிராமத்திலும் சனி யன்று திடீரென கடல்நீர் ஊருக்குள் புகுந்தது. இதில் கடற்கரையோரம் உள்ள சில வீடுகளில் தண்ணீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது. மேலும் சில வீடுகளில் அரிப்பு ஏற் பட்டு சேதமடைந்தன. மிடாலத்தில் கடல் அரிப்பை தடுப்பதற்காக போடப் பட்ட கற்கள் சேதமடைந்தன. இந்நிலையில் ஞாயிறன்று அகஸ்தீஸ்வரம் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், வட்டாட்சியர் சேகர் உள்ளிட்ட அதிகாரிகள் பாதிக் கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட னர். அங்கு ஊருக்குள் புகுந்த தண் ணீரை வெளியேற்றும் நடவடிக்கை யில் ஈடுபட்டனர். சேத விவரத்தை யும் கணக்கிட்டனர். கணபதிபுரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பொக் லைன் எந்திரம் மூலம் வீடுகளை சூழ்ந்த தண்ணீரை மீண்டும் கட லுக்குள் திருப்பி விடும் பணி நடந் தன. ஒரு சில வீடுகள் முன்பு கடல் நீர் வீடுகளுக்குள் செல்லாமல் இருக்கும் வகையில் மணல் மூடை கள் அடுக்கி வைக்கப்பட்டுளளது. கடல் நீர் புகுந்த வீடுகளில் இருந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறியதை அடுத்து அந்த பகு தியில் உள்ள மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டனர். 50 பெண்களும், 15 ஆண்களும் முகாமில் தங்க வைக் கப்பட்டுள்ளனர்.
சிபிஎம் அறிக்கை
கடல் நீர் ஊருக்குள் புகுவதை தடுக்க அழிக்கால், மேல்மிடாலும் போன்ற பகுதிகளில் தூண்டில் வளைவுகள் அமைத்து நிரந்தர தீர்வு காண வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடியாக தேவைப்படும் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட வேண்டும். வீடு களுக்குள் நிரம்பியுள்ள மணலை போர்க்கால அடிப்படையில் அப்புறப்படுத்த வேண்டும். கழிப்ப றைகளில் மணல் நிரம்பியுள்ளதால் ஏற்படும் சுகாதார சீர்கேட்டை கருத் தில் கொண்டு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குமரி மாவட்ட செயலாளர் ஆர்.செல்லசுவாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தமி ழக அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.