திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையை அடுத்த கிராம குளம்,சாலையோர பகுதியில் வட்டாட்சியர் தனுஷ்கோடி தலைமையில் மரக்கன்று நடும் பணி துவக்க விழா மற்றும் பொதுமக்களுக்கும் இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. கூவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், செயலர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர், மரகன்றுகளை ஏற்பாடு செய்த (டைம்)தனியார் தொண்டு நிறுவன இயக்குனர் முருகேசன் வரவேற்றார், நிலக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அண்ணாதுரை, பஞ்சவர்ணம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.