விருதுநகர். நவ.20- விருதுநகர் மாவட்டத்தின் முதல் புத்தகத் திருவிழா கே.வி.எஸ்.பள்ளியில் நடைபெற்று வருகிறது. இதில் மதுரை மக்களவை உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமான சு.வெங்கடேசன் கருத்துரையாற்றினார். அவர் பேசியதாவது : விருதுநகர் புத்தகத் திருவிழா வில் சாம்பல் நிற அணில் கண்ணாடி அணிந்து புத்தகம் படிப்பது போல் இலச்சினையாக வடிவமைத்தது சிறப்பாகும். “கதை உரைக்கப் பெருகும்” என கூறுவார்கள். கதை சொல்லச் சொல்ல அது அதிகரித்துக் கொண்டே போகும். காகம் கரைந்தால் விருந் தாளி வருவார்கள் என பழநெடுங் காலமாக தமிழகம் முழுவதும் கதைகள் கூறி வந்துள்ளனர். மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்திற்கும் கிரேக்கத் திற்கும் கடல் வணிகம் இருந்துள் ளது. கடல் ஓரத்திலேயே கப்பலில் சென்று வியாபாரம் செய்துள்ள னர். இரவு நேரத்தில் புயல் காற்று அடித்து கப்பல்கள் நடுக்கடலுக்கு சென்றுவிட்டால், கரையை அறிந்து கொள்ள கூட்டினுள் அடைக்கப்பட்டிருக்கும் காக்கை யை எடுத்து பறக்க விடுவார் மாலுமி. காக்கை எந்த திசையை நோக்கி செல்கிறதோ, அப்பகுதி யில்தான் கரை உள்ளது என்பதை அறிந்து கொண்டு கரைக்கு வரு வார்கள்.
மெசபடோமியா நாகரிகமும், சிந்து சமவெளி நாகரிகமும் பழ மையானது. இவை அழிந்து விட்டன. மெசபடோமியாவில் நடை பெற்ற அகழாய்வில் ஒரு முத்திரை கிடைத்துள்ளது. அதில், ஒரு கப்ப லில் மாலுமி காக்கையை பறக்க விடுவது போல் உள்ளது. இந்த முத்திரை சிந்து சமவெளியைச் சேர்ந்தது என ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்தனர். ஏனெனில் ஐரோப்பா பகுதியில் காகங்கள் கிடையாது. ஒரு பெண் கடற்கரையில் வரும் போது, காகம் ஒன்று கடல் பகுதியில் இருந்து கரைந்தபடி வந்தது. அப்போது அப்பெண் கப்பலில் விருந்தாளிகள் வரப் போகிறார்கள் எனப் பாடுகிறார். அவர் தான் காக்கைப்பாடினியார். ஆக., காகம் கரைந்தால் விருந்தாளி வருவார் என்பது மிகப் பழைய கதையாகும். இலக்கியம், புத்தகங்கள் ஏன் தேவை? மனித மனங்களில் உள்ள அழுக்குகளை கழுவ கண்டு பிடிக்கப்பட்ட கருவியே புத்தகங் கள். மனிதனை செம்மைப்படுத்து வதும் புத்தகங்களே. இந்த நேரத்தில் வில்லிபுத் தாரை நாம் நினைவில் கொள்ள வேண்டும். பாரதத்தை தமிழ் கதை யாக மாற்றியவர் அவர் தான். இரு மொழிகளின் சங்கமம் என நமது பிரதமர் கூறுகிறார். ஆனால் தமி ழுக்கும், சமஸ்கிருதத்திற்கும் நுட்ப மாக வேறுபாடு உள்ளது. உண்மை சுடர் விட்டு எரியும். அதை மறைக்க ஆளும் வர்க்கம் முயற்சிக்கும்.
குரண்டியில் சமண பள்ளிகள்
அருப்புக்கோட்டை அருகே உள்ள குரண்டியில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மிகப் பெரிய பல்கலைக்கழகம் இருந்தி ருக்க வேண்டும். தமிழ் அறி ஞர்களின் பீடமாக அந்த ஊர் இருந்துள்ளது. ஏனெனில், 2 ஆயி ரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகள் இந்தியாவில் ஏரா ளம் உள்ளன. அதில் அதிகமாக குரண்டி என்ற பெயர் வந்து கொண்டே உள்ளது. சமண பள்ளிகள் ஏரா ளம் இருந்துள்ளன. சைவம் , வைண வம் மோதலில் சமணம் அழிந்து போய்விட்டது. அதில் குரண்டியும் சுவடு தெரியாமல் எவ்வித தடமும் இன்றி அழிக்கப்பட்டுள்ளது. கட்டிடம் காலப் போக்கில் அழி யும். ஆனால் அறிவுச் சிந்தனை ஒரு போதும் அழியாது. மனிதன் தான் கற்ற அறிவை இயற்கை கடத்த மறுக்கிறது என்பதை கண்டு பிடித்தான். அடுத்த தலைமுறைக்கு அதை கடத்த முயற்சித்தான். “அந்த மகத்தான கண்டுபிடிப்புதான் புத்தகம்“. அந்த வகையில், இரண்டாயி ரம் ஆண்டுகளுக்கு முந்தைய அறி வுச் சொத்தாக திருக்குறள் உள் ளது. அறிவின் வாசலே புத்தகக் கண்காட்சி. இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில் தமுஎகச மதிப்புறு மாநிலத் தலைவர் ச.தமிழ்செல் வன் எழுதிய “தமிழ் சிறுகதை யின் தடங்கள்“ நூல் வெளியி டப்பட்டது. மேலும் இதில் தமுஎகச நிர்வாகிகள் தேனிவசந்தன்,மா.மணிமாறன், இலட்சுமிகாந்தன், ரவீந்திரன் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர். பின்பு, திண்டுக்கல் ஐ. லியோனி தலைமையில் பட்டி மன்றம் நடைபெற்றது. இதில் ஏரா மான பொது மக்கள் கலந்து கொண்டனர்.