districts

img

கோட்டப் பொறியாளர் அலுவலகத்தை சாலைப்பணியாளர்கள் முற்றுகை

திண்டுக்கல், டிச.14- 5 அம்சக் கோரிக்கை களை வலியுறுத்தி திண்டுக் கல் கோட்டப் பொறியாளர் அலுவலகத்தை சாலைப்  பணியாளர்கள் முற்றுகை யிட்டு காத்திருக்கும் போரா ட்டத்தில் ஈடுபட்டனர்.  சாலைப்பணியாளர்கள் பணியில் சேர்ந்த போது  ஓராண்டு பயிற்சி சாலைப் பணியாளர்களாக பணி யாற்றினார்கள். அந்த பயிற்சி காலத்தில் செயலாற்றிய 50 விழுக்காடு பணிக்கால ஊதியத்தை ஓய்வூதியத் தோடு சேர்க்க வேண்டும்.தனியார் பராமரிப்புக்கு ஒதுக்கீடு செய்த சாலையில் அரசு சாலைப்பணியாளர் களைக் கொண்டு வேலை  வாங்கக்கூடாது என்பன உள்ளிட்ட 5 அம்சக் கோரிக் கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.  நெடுஞ்சாலை உதவி கோட்டப் பொறியாளர் கட்டு மானம் மற்றும் பராமரிப்பு அலுவலகம் முன்பாக நடை பெற்ற இந்த போராட்டத்தில் ராஜமாணிக்கம் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.