சின்னாளபட்டி, மே 9- திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் முருநெல்லிக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட சுள்ளெறும்பு நால்ரோட்டிலிருந்து கன்னடம்பட்டி வரை செல்லும் நால்ரோட்டில் பல இடங்களில் சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதுதவிர பல இடங்களில் மண் அரிப்பால் சாலை மிகவும் சேதமடைந்துள்ளது. இதனால், இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் தடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி சாலையை புதுப்பித்து தர வேண்டும் என்று தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.