districts

img

அடிப்படை வசதி குறித்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுக!

விருதுநகர் நகராட்சி கூட்டத்தில் உறுப்பினர்கள் கோரிக்கை விருதுநகர், மே 18- விருதுநகர் நகராட்சி அவசரக் கூட்டம் நகர்மன்றத் தலைவர் ஆர். மாதவன் தலைமையில் நடைபெற் றது. ஆணையாளர் சையது முஸ்தபா கமால், துணைத் தலைவர் தனலட் சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்போது நடைபெற்ற விவாதம் வருமாறு: சொத்து வரி உயர்வு குறித்த தீர்மா னத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர்மன்ற உறுப்பினர் ஜெயக்குமார், சாதாரண ஏழை, எளிய மக்களின் பொருளாதார நிலை உயரவில்லை, பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்ந்து வருகிறது. எனவே, சொத்து வரியை உயர்த்த ஆட்சேபனை தெரிவிப்பதாக கூறினார். இதையடுத்து அந்த தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது. விருதுநகரில் உள்ள மருத்துவக் கல்லூரிக்கு முன்னாள் முதல்வர் காம ராஜரின் பெயரை சூட்ட வேண்டு மென காங்கிரஸ் உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். பரிசீலிக்கப் படும் என தலைவர் பதில் கூறினார். அகமது நகர் பகுதியில் பாதாள சாக்கடை மூடி உடைந்து உள்ளது.

விபத்து ஏற்படும் முன் சீர் செய்ய வேண்டுமென உறுப்பினர் பால் பாண்டி கோரிக்கை விடுத்தார்.  நகராட்சியில் பொறியாளர் இல்  லாத காரணத்தால், மதிப்பீடு எடுப் பது, டெண்டர் விடும் பணியில் தேக்  கம் ஏற்பட்டுள்ளது. மண்டல இயக்கு நர் அலுவலகத்தில் தெரிவித்துள் ளோம். ஒரு வாரத்தில் புதிய பொறியா ளர் வர உள்ளதாக தெரிவித்துள்ளனர் என ஆணையாளர் பதில் கூறினார். கடந்த கூட்டத்தில் ஜேசிபி இயந்தி ரம் பழுதானது குறித்தும், பாதாள  சாக்கடை அடைப்பு எடுக்கும் வண்டி யை சீரமைப்பது பற்றியும், குப்பை  வண்டிகளை சீரமைக்க வேண்டு மெனவும் பல உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். அதில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் உறுப்பினர்கள் கூறும் கோரிக்கைகளை ஏன் நிறை வேற்றவில்லை? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர்மன்ற உறுப்பினர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார். ஜேசிபி இயந்திரம் ஒரு சில நாட்களில் வந்து விடும்.

பாதாள சாக்கடை வாகனத்தில் உள்ள பழுது குறித்து மதிப்பீடு தயார் செய்யப் பட்டுள்ளது. குப்பை வண்டிகளை சீரமைக்க டெண்டர் விட வேண்டும் என தலைவர் பதிலளித்தார். குப்பைகளை நகராட்சி ஊழி யர்களே பிரிப்பதால் பிற்பகலில் வாறு கால் சுத்தம் செய்யும் பணி தேக்கம் அடைந்துள்ளதாக உறுப்பினர் உமா ராணி புகார் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த தலைவர், நகர சுகாதாரத்தில் பொது மக்களுக் கும் பங்கு உண்டு. எனவே, குப்பை களை பொதுமக்கள் தான் பிரித்தே வழங்க வேண்டும் என்றார். நகராட்சி குடிநீரை கூட்டத்தில் கலந்து கொள்ளும் உறுப்பினர் களுக்கு வழங்குங்கள். கேன் தண்ணீர்  ஏன் வழங்குகிறீர்கள் என திமுக உறுப்பினர் பாட்ஷா ஆறுமுகம் கேள்வி எழுப்பினார். அடுத்த கூட்டத்திலிருந்து அனைத்து உறுப்பினர்களுக்கும் நகராட்சி குடிநீரே வழங்கப்படும் என  தலைவர் பதில் கூறினார். எல்.இ.டி விளக்குகள் பழுத டைந்து பல மாதங்கள் ஆகி விட்டன. ஏன் இன்னும் பழுது பார்க்கவில்லை. இதனால் தேசபந்து மைதானம் இருள் சூழ்ந்து உள்ளது என உறுப்பி னர் மதியழகன் கேள்வி எழுப்பி னார். ஒப்பந்தகாரர் மிக மெதுவாக வேலை செய்கிறார். அவரை மாற்றும் அதிகாரம் நகராட்சி நிர்வாக இயக்கு நரிடம் தான் உள்ளது. மேலும் தேச பந்து மைதானத்தில் உள்ள ஹைமாஸ் விளக்கை சீரமைக்க சென்னையில் இருந்து ஆட்கள் வர  உள்ளனர் என தலைவர் பதிலளித் தார்.