districts

img

மயிலாடும்பாறை அருகே தார்ச்சாலை சீரமைப்பு

கடமலைக்குண்டு, மார்ச் 17- மயிலாடும்பாறை அருகே நேருஜிநகர் முதல் மூலக்கடை வரையுள்ள சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவிலான தார்  சாலையை சீரமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.  இந்த கோரிக்கையை தொடர்ந்து நேருஜிநகர் முதல் மூலக்கடை வரை புதிய தார்சாலை அமைக்க அரசு உத்தரவிட்டு அதற்காக 1.5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய் தது. இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. புத னன்று தார் சாலை அமைக்கும் பணி களை நெடுஞ்சாலை துறை உதவி கோட்ட பொறியாளர் திருமுருகன் ஆய்வு மேற்  கொண்டார். அப்போது தார் சாலை பணி களை துரிதப்படுத்த உத்தரவிட்டார்.