districts

img

போதுமான மழை இல்லாத காரணத்தால் இராமநாதபுரம் மாவட்டம்

போதுமான மழை இல்லாத காரணத்தால் இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகாவை வறட்சிப் பகுதியாக அறிவித்து ஏக்கருக்கு ரூ.30,000 வறட்சி நிவாரணமாக வழங்க வேண்டுமென வலியுறுத்தியும்,  பயிர்க் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் 100 சதவீதம் இழப்பீடு தொகை வழங்க வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் முதுகுளத்தூர் தாலுகா அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாலுகா செயலாளர் வி முருகன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என் கலையரசன்,  மாவட்டக் குழு உறுப்பினர் கே கணேசன்,  மற்றும் முனியசாமி சண்முகையா  முனியசாமி. திருமலை தர்மலிங்கம்.  சிபிஐ தாலுகா செயலாளர் ஜெயசீலன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.