இராமநாதபுரம்,ஜூன் 12- இராமநாதபுரம் மாவட் டம் ஏர்வாடி தர்ஹா ஷரீப் சந்தனக்கூடு விழா சிறப்பாக நடத்துவது தொடர்பாக அனைத்துத்துறை அலுவ லர்கள் மற்றும் ஏர்வாடி தர்ஹா ஹத்தார் நிர்வாக சபை உறுப்பினர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கர்லால் குமாவத் ஏர்வாடி தர்ஹாவில் ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக் கூட் டத்தில் ஊராட்சி சார்பில் குடி நீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற் படுத்தவும், போக்குவரத்துத் துறை சார்பில் கூடுதலாக உள்ளூர் பேருந்துகளை இயக்கவும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மருத்துவர்கள் தலைமையில் செவிலியர் கள் அடங்கிய குழு அமைத்து ஆம்புலன்ஸ் வசதியுடன் தயார் நிலையில் இருக்க வும், காவல் துறையினர் தேவையான பாதுகாப்பு பணி யில் ஈடுபடவும், பொதுமக் கள் அனைவரையும் முகக் கவசம் அணிய அறிவுறுத்த வும் மாவட்ட ஆட்சித் தலை வர் சம்மந்தப்பட்ட அலுவலர் கள் மற்றும் ஏர்வாடி தர்ஹா ஹத்தார் நிர்வாக சபை உறுப் பினர்களை கேட்டுக்கொண் டார். இந்நிகழ்வில் இராமநாத புரம் வருவாய் கோட்டாட்சி யர் சேக் மன்சூர் , கீழக்கரை வட்டாட்சியர் சரவணன் ,கட லாடி ஊராட்சி வட்டார வள ர்ச்சி அலுவலர் அண்ணாத் துரை உள்ளிட்ட அரசு அலு வலர்கள், ஏர்வாடி தர்ஹா ஹத்தார் நிர்வாக சபை உறுப் பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.