districts

img

பொதுமக்கள் குறைதீர் முகாம்

மதுரை மாநகராட்சி மண்டலம் 3 (மத்தியம்) அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் மே 30 அறு நடைபெற்றது. மொத்தம் 78 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மேயர் நேரடியாக பெற்றுக்கொண்டார். பொதுமக்களிடமிருந்து அடிப்படை வசதிகள் வேண்டி பெறப்படும் மனுக்களுக்கு மாநகராட்சி அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மேயர் உத்தரவிட்டார். இம்முகாமில் துணை மேயர் தி.நாகராஜன், மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி, மாநகராட்சி அலுவலர்கள், மாமன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.