சின்னாளப்பட்டி,மே 9- திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஒன்றி யம் கன்னிவாடி பேரூராட் சிக்குட்பட்ட 15 ஆவது வார்டு சொக்கலிங்கபுரம் புதூரில் அருந்ததிய சமூக மக்கள் வசிக்கிறார்கள். இவர் களுக்கு பொது குடிநீர் குழாய் வசதி செய்து தர வேண்டும். சின்டெக்ஸ் தொட்டியில் உடைந்த நான்கு குழாய் களையும் சரி செய்ய வேண் டும் மின்மோட்டார் அறை யை சீரமைக்க வேண்டும். சாக்கடை வசதி செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சொக்கலிங்கபுரம் புதூ ரில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு கட்சியின் கிளைச் செயலாளர் மணிகண்டன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப் பினர் முத்துச்சாமி. ஒன்றிய செயலாளர் சக்திவேல் ஆகியோர் உரையாற்றி னார். ஆர்ப்பாட்டத்தில் பலர் கலந்து கொண்டனர்.