districts

img

இராமநாதபுரத்தில் 8 மையங்களில் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

இராமநாதபுரம்,ஜூலை 22- திமுக தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்தபடி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசு ஆசிரி யர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். தற்காலிக ஆசிரி யர் நியமனத்தை கைவிட வேண்டும். ஒன்றிய அரசு தேசிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும். மாநில அரசு புதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை  வலி யுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக இராம நாதபுரம் மாவட்டத்தில் ஆர்.எஸ்.மங்கலம், போகலூர், திருவாடானை, மண்டபம், திருப்புல்லாணி, பரமக்குடி, முதுகுளத்தூர், கடலாடி ஆகிய மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்.எஸ். மங்கலத்தில் வட்டாரத் தலைவர் அந்தோணியம்மாள் தலைமை வகித்தார் .மாவட்ட நிர்வா கிகள் ராஜசேகரன், பழனிவேல், வட்டார நிர்வாகிகள் அசோக் குமார், அருள் செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் .போகலூரில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ச பஞ்ச வர்ணம் தலைமை வகித்தார். நிர்வாகிகள் லூகாஸ் ,ஏ.எம்.தேவி ஆகியோர் பேசினர் . எஸ்.காந்தி, ராமச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.