மதுரை, டிச. 21- உரிய ஆவணங்களுடன் ரயில்வே காலி யிடத்தில் தலித் மக்களை குடியிருக்க அனு மதியளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தென்னக ரயில்வே மதுரை கோட்ட மேலா ளரிடம் மனு அளிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அண்ணா நகர் பகுதி மக்கள் மற்றும் தலித் விடுதலை இயக்கம் சார்பில் மாநில தலை வர் கருப்பையா ஆகியோர் செவ்வாயன்று நேரில் சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப் பதாவது: மானாமதுரை அண்ணா நகரில் சர்வே எண் 409 மற்றும் 410-இல் உள்ள தென் னக ரயில்வேக்கு சொந்தமான காலி இடத்தில் பெரும்பான்மையான தலித் மற்றும் ஒரு சில பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 95 குடும்பங்கள் நூறு ஆண்டுகளுக்கு மேலாக நான்கு தலைமுறையாக வீடு கட்டி குடி யிருந்து வருகின்றனர் இவர்கள் குடியிருப் பிற்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மூலம் தனிநபர் மின் இணைப்பு, மானாமதுரை பேரூராட்சி அலுவலகத்தின் சார்பாக குடி யிருக்கும் வீட்டிற்கு வீட்டு வரி ரசீதும் வழங் கப்பட்டு வரியும் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் அப்பகுதியில் உள்ள மக்களுக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை,ஆதார் அட்டை வழங்கப்பட்டுள் ளது, அரசின் சில அடிப்படை வசதிகளும் அப்பகுதி மக்களுக்கு செய்து கொடுக்கப் பட்டுள்ளது. இதில் சில தனிநபர்கள் லாப நோக்கத்தோடு 99 ஆண்டு குத்தகை ஒப்பந் தத்தின்படி பணம் சம்பாதிக்கும் நோக்கில் தங்கும் விடுதி, மர அறுவை மில் போன்ற வைகள் கட்டி பணம் சம்பாதித்து வரு கிறார்கள். இது போன்ற தனியார் நிறு வனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. அதே போல் இப்பகுதியில் வசிக்கும் மக்களுக் கும் தென்னகரயில்வே குடியிருப்பதற்கான வழிவகை செய்து தர வேண்டும் . இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள் ளது.