தருமபுரி, பிப்.7- இலவச வீட்டுமனைபட்டா கேட்டு சோகத்தூர் கிராம மக்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தியிடம் மனு அளித்தனர். தருமபுரி ஒன்றியம், சோகத்தூர் கிராமத்தில் பெரும் பகுதி ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த ஏழை மக்கள் வசிக் கின்றனர். தினக்கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வரும் இவர்களில், பெரும்பகுதினருக்கு விவசாய நிலம் இல்லை. வீட்டிற்கான இடமும் இல்லை. மூன்று தலைமுறைகளாக ஒரே வீட்டில் இரண்டு, மூன்று குடும்பங்களாக வாழ்ந்து வரு கின்றனர். இப்பகுதியில் உள்ள 56 பேருக்கு கடந்த 2006 ஆம் ஆண்டு ஏ.ரெட்டி அள்ளி கிராமாத்தின் அருகே இலவச மனைப்பட்டா வழங்கப்பட்டது. அதேபோல் மீதமுள்ள நத்தம் புறம்போக்கு நிலத்தில் வீடு இல்லாதவர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்கவேண்டும் என மனு அளித்தனர். மதுபானக் கடை வேண்டாம் இதேபோன்று, தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் சிந்தல்பாடி கிராம மக்கள் அளித்துள்ள மனுவில், எங்கள்்பகுதியில், மதுபானக்கடை இருப்பதால் பெரிய வர்கள் முதல் சிறியவர்கள் வரை மது அருந்துகின்றனர். மதுபானக்கடை இருப்பதால் அதிக அளவில் மாண வர்கள் மதுவுக்கு அடிமையாகியுள்ளார். மேலும், மாண வர்கள் மது வாங்கிகொண்டு அருகில் உள்ள ரயில்தண்ட வாளத்திற்க்கு சென்று விடுகின்றனர். போதை தலைக்கேறி யவுடன் ரயிலில் சிக்கி இறக்கின்றனர். இரவில் மதுக்கடை மூடினாலும் சட்ட விரோத சந்துக்கடைகளில் மது கிடைக் கிறது. இச்சம்பவம் குறித்து மொரப்பூர் காவல்நிலையத்தில் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, அரசு மதுபானக்கடை மற்றும் சட்டவிரோத சந்துகடைகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளனர்.