districts

img

மயானத்தை சூழ்ந்த கண்மாய் நீர் உசிலம்பட்டி அருகே இறந்தவர் உடலை ஒரு கி.மீ. தூரம் தண்ணீரில் தூக்கிச்சென்ற அவலம்

மதுரை, டிச.5- மதுரை மாவட்டம் உசி லம்பட்டி அருகே சடச்சிபட்டி யைச் சேர்ந்தவர் பாண்டி மகன் தங்கப்பாண்டி, கூலி தொழிலாளியான  இவர்  ஞாயிறன்று மது போதையில் ஊரில் சுற்றித் திரிந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் காளியம்  மன் கோவிலில் அமைக்கப் பட்டுள்ள பந்தலில் தூக்குப் போட்டு  தற்கொலை செய்து கொண்டதைக் கண்டு அதிர்ச்சி யடைந்த குடும்பத்தினர், காவல்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு  வந்த  உத்தப்பநாயக்கணூர் காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூராய் விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சடச்சிபட்டி கிராம மக்க ளுக்கு பாத்தியப்பட்ட மயா னம் பெரியகுறவகுடி கண்  மாய்அருகில் உள்ளது, தொடர்ந்து பெய்து வரும் மழையாலும்  திருமங்கலம் பிரதான கால்வாய் மூலம் வரும் வைகை நீரின் காரண மாகவும் கண்மாய் நிரம்பி  அருகே உள்ள மயானத்தை  நீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் மயானத்திற்கு  செல்ல முடியாத சூழலில் திங்களன்று தங்கப்பாண்டி யின் உடலை   சுமார் ஒரு  கிலோ மீட்டர் தூரம் இடுப்ப ளவு நீரில் தூக்கி சென்று அடக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்த பல ஆண்டு களாக உள்ள இந்த அவல நிலை குறித்து ஊராட்சி ஒன்  றிய அலுவலகத்திலும், கிராம சபை கூட்டங்களிலும் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை என்று கிராம மக்  கள் வேதனையுடன் தெரிவிக்  கின்றனர். மயானத்திற்கு பாதை அமைத்துத்தரும்படி வலியுறுத்தினர்.