தூய்மையான நகரத்திற்கான மக்கள் இயக்க ஊர்வலம் சிவகங்கை நகரில் நகர்மன்ற தலைவர் சிஎம்.துரைஆனந்த் தலைமையில் நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன், நகராட்சி பொறியாளர் பாண்டீஸ்வரி முன்னிலையில் நடைபெற்றது. இதில் தமிழாசிரியர் இளங்கோ, நகர்மன்ற துணை தலைவர் கார்கண்ணன், நகர்மன்ற உறுப்பினர்கள்,நகராட்சி அலுவலர்கள்,நகராட்சி பணியாளர்கள் லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள், நகர பொதுமக்கள் பங்கேற்றனர்.