மதுரை, ஏப். 6- 31 சதவீதமாக உயர்த்தி வழங்கப்பட்ட அகவிலைப்படி யை வாரியத்தில் பணியாற்றும் அதிகாரிகளுக்கும், ஊழியர் களுக்கும் வழங்குவது போல் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் வழங்க வேண்டும். ஓய்வு கால பலன்கள், பணிக்கொடை, ஓய்வூதியம், விடுப்பு கால பண பயன்கள் காலம் தாழ்த்தாமல் உடனே வழங்க வேண்டும் என்று வலி யுறுத்தி தமிழ்நாடு குடிநீர் வடி கால் வாரிய ஓய்வூதியர்கள் நலச் சங்கம் சார்பில் மட்டுத்தாவணி எதிரில் உள்ள குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் சட்ட ஆலோசகர் செ.ஆஞ்சி தலைமை வகித்தார். மாநிலப் பொதுச் செயலாளர் எஸ். லோகநாதன், மாநிலப் பொரு ளாளர் எம். மலைராஜன் ஆகி யோர் பேசினர். மாநில நிர்வாகி ராமசாமி, புதுக்கோட்டை யாசிந்த், இராமநாதபுரம் தட்சி ணாமூர்த்தி, திருச்சி நாகேந்தி ரன், சேலம் வெங்கடசலம் ஆகிய மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.