மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்ட மூத்த தலைவர் மறைந்த தோழர் எம்.பி. பாண்டியராஜனின் 19 ஆம் நினைவு தினத்தைமுன்னிட்டு பழைய வத்தலகுண்டில் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன், ஒன்றியக்குழு உறுப்பினர் எம்.பி.பி. ஜீவானந்தம், கிளைச் செயலாளர் நல்லமுத்து மற்றும் பலர் கலந்துகொண்டனர்.