இராமநாதபுரம், ஜன.29- இராமநாதபுரம் மாவட் டம், சிக்கல் ஊராட்சியை மையப்படுத்தி சிக்கல் ஊராட்சி ஒன்றியம் அமைப் பது குறித்த கலந்தாலோச னைக் கூட்டம் சிக்கலில் தட்சி ணாமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி மன்றத் தலைவர் கள், கவுன்சிலர்கள், கட்சி பிர முகர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டு தங்களது கருத்துக்களைக் கூறினர். கிராம வளர்ச்சி மற்றும் சிக்கல் ஊராட்சி ஒன்றியம் அமைவதற்காக இயக்கங் களை முன்னெடுக்க அமைப் புக்குழு ஒன்றும் தேர்வு செய் யப்பட்டது. இக்குழுவிற்கு தலைவராக மீசா சைபுத்தீன், செயலாளராக கே.பச்சமால், பொருளாளராக எஸ். ஆறு முகம், துணைத்தலைவராக அம்மாசி, மு. உசைன் கனி, துணைச் செயலாளராக தட்சி ணாமூர்த்தி, மங்கள சாமி ஆகியோர் தேர்வு செய்யப் பட்டனர். ராமசாமி நன்றி கூறி னார். கடந்த 27- 8-2022 அன்று சிக்கல் ஊராட்சி ஒன்றியம் அமைக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார் பாக சிக்கல் நகரத்தில் கோரி க்கை மாநாடு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.