சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் டாடா குழும நிதியுதவியுடன் ஆக்ஜிசன் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி தலைமையில், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம் முன்னிலையில் புதனன்று நடைபெற்றது. உடன் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி, டாடா குழும தமிழ்நாடு மண்டல துணைத்தலைவர் சுரேஷ்ராமன். இணை இயக்குநர் மருத்துவப் பணிகள் வே.ராஜசேகரன் உட்பட பலர் உள்ளனர்.