திண்டுக்கல், மே.20- சொத்துவரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல் மாநக ராட்சி. கன்னிவாடி, நத்தம் பேரூ ராட்சிக் கூட்டத்திலிருந்து சிபிஎம் கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். திண்டுக்கல் மாநகராட்சியின் சிறப்புக்கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது.கூட்டத்திற்கு மேயர் இளமதி தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் சொத்துவரி சீராய்வு தொடர்பான தீர்மானம் கொண்டுவரப்பட்டது. கூட்டத்தில் 48 மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் துவங்கிய வுடன் மேயர் இளமதி பேசுகையில், திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த 2008 ஆம் ஆண்டுக்குப் பிறகு சொத்து வரி உயர்த்தப்படவில்லை.
ஆகவே மாநகராட்சியின் நிதி நிலையை கருத்தில் கொண்டு தற்பொழுது சொத்துவரியை உயர்த்த உள்ளதாக தெரிவித்தார். சொத்துவரி உயர்த்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர் ஜோதிபாசு எழுந்து இந்த தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளிநடப்பு செய்வதாக அறிவித்து முழக்கம் எழுப்பினார். இதனை யடுத்து சிபிஎம் கவுன்சிலர்கள் கே.எஸ்.கணேசன். மாரியம்மாள் ஆகியோரும் சொத்து வரி உயர்வு க்கு எதிராக முழக்கம் எழுப்பி வெளிநடப்பு செய்தனர். இதே கோரிக்கையை வலி யுறுத்தி கவுன்சிலர் ராஜ்மோகன் பேசும் போது,மக்கள் கொரோனா காலத்திலிருந்து பல்வேறு சிரமங்க ளுக்கு இடையே இப்போது தான் மீண்டுடெழுந்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த வரிச்சுமை தேவையற்றது என்றார். அப்போது குறுக்கிட்டு துணை மேயர் ராஜப்பா, இந்த வரிச்சுமை மக்களை பெரிய அளவில் பாதிக்காது என் றார். பாஜக உறுப்பினர் தனபால், இந்த வரிச்சுமை தொடர்பாக பொது மக்களிடம் இதுவரை மாநக ராட்சி நிர்வாகம் கருத்து கேட்புக் கூட்டத்தை நடத்தவில்லை என்றார்.
துணை மேயர் ராஜப்பா, ஒன்றிய பாஜக அரசு பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் என அத்தியா வசிய பொருட்கள் மீது ஒவ்வொரு நாளும் வரியை அதிகரித்து வரு கிறது என்றார். திமுக கவுன்சிலர் ஜான்பீட்டர் பேசும் போது, குப்பை வரியை அதிமுக அரசு கொண்டு வந்தது என்றார். மேலும் வீடு வீடாகச்சென்று 9840 படிவங்களை கொடுத்து பூர்த்தி செய்து வாங்கியுள்ளோம். இது தொடர்பாக யாரும் ஆட்சேபிக்க வில்லை என்றார். ஆனால் அந்த படிவம் கருத்து கேட்பு படிவம் அல்ல, குடியிருப்போர் விபரம் கேட்பு படிவம் என்ற தனபால் மேலும் பேசுகையில், மோடி அரசு தான் மக்களுக்காகவும், விவசா யிகளுக்காகவும் பல்வேறு நலத்திட்டங்கள் பெயரில் வங்கிக் கணக்கில் பணம் போடுவதாக பேசினார். இதனையடுத்து திமுக கவுன்சிலர் ஜானகி ராமன் பேசும் போது, இதுவரை சமையல் எரி வாயுவுக்கு என மானியம் வங்கிக் கணக்கில் போடாமல் ஏமாற்றிய தாக பேசினார். இந்த காரசாரமான விவாதத்தையடுத்து அதிமுக கவுன்சிலர்களும், பாஜக கவுன் சிலர்களும் வெளிநடப்பு செய்த னர். இதனையடுத்து திண்டுக்கல் மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் சொத்துவரி உயர்த்து வது தொடர்பான தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. மாமன்ற உறுப்பி னர்கள் வெளிநடப்பு செய்தது மாமன்றத்தில் சிறிதுநேரம் சலசலப்பை ஏற்படுத்தியது.
கன்னிவாடி
திண்டுக்கல் மாவட்டம், கன்னி வாடி பேரூராட்சி அவசரக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேரூ ராட்சி மன்றத்தலைவர் தனலட்சுமி சண்முகம் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கீதாமுருகா னந்தம் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் ஜெயமாலு வர வேற்று பேசினார். கூட்டம் நடை பெறும் போது கூட்டத்தில் பார்வை யாளராக கலந்து கொள்ள பொது மக்கள் மற்றும் சிபிஎம் கட்சியினர் வந்தபோது கூட்டத்தில் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என எழுத்தர் முத்துராம் மறுத்து உள்ளே நுழைய அனு மதிக்கவில்லை. இதற்கு பொது மக்கள் மற்றும் சிபிஎம் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கூட்டத்தில் சிபிஎம் 1 ஆவது வார்டு கவுன்சிலர் மணிமாலதி பேசுகையில், திண்டுக்கல் மாவட் டத்திற்கு வந்த பேரூராட்சிகளின் இயக்குநர் குப்பைத்தொட்டி, குப்பை கிடங்கை ஆய்வு செய்து விட்டு சென்று விட்டார். இந்த ஊரில் (கன்னிவாடி) ரூ.6 கோடி மதிப்பில் நவீன பேருந்து நிலையம் அமை கிறது. அதை ஏன் பார்வையிட வர வில்லை. வேலை எப்படி நடந்தா லும் பரவாயில்லையா? என்று கேள்வி எழுப்பினார். தி.மு.க.கவுன்சிலர் சர்புதீன், எனது வார்டு மற்றும் அருகில் உள்ள வார்டுகளில் மலையடிவாரப் பகுதியில் இணைந்துள்ளது. தெரு விளக்கு வசதிகளை அதிகப்படுத்த வேண்டும் என்றார். சிபிஎம் கவுன்சிலர் மணி மாலதி, அதிமுக கவுன்சிலர் மோகன் ஆகியோர் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரி வித்து கூட்டத்திலிருந்து வெளி நடப்பு செய்தனர். பெரும்பாலான கவுன்சிலர்கள் ஒப்புதல் அளித்த தால் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
நத்தம்
நத்தம் பேரூராட்சிக் கூட்டத்தில் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கவுன்சிலர் வெளி நடப்பு செய்தார். திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேரூராட்சி சிறப்பு கூட்டம் தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா தலைமை யில் நடைபெற்றது. செயல் அலு வலர் சரவணக்குமார், துணை தலைவர் மகேஸ்வரி சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டம் தொடங்கியவுடன் சொத்து வரி உயர்வு சம்பந்தமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கவுன்சிலர் விஜயவீரன் மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அலுவலக வாயில் முன்பாக சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கம் எழுப்பினர்.