விருதுநகர், மே 3- விருதுநக மாவட்ட ஆட்சி யர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் கீழ் ரூ.8.47 லட்சத்தில் புதுப்பிக் கப்பட்ட காதி கிராப்ட விற் பனை அங்காடியை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் திறந்து வைத்தார். அப்போது ஆட்சியர் கூறு கையில், இந்த காதி கிராப்ட் அங்காடி 2003 ஆம் ஆண்டு துவக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது ரூ.8.47 லட்சத்தில் நிதி ஒதுக்கீடு செய்து புதுப்பிக்கப்பட்டுள்ளது. இங்கு, கதர் துணி ரகங் கள், பாலிஸ்டர் பெட்சீட், துண்டுகள், கிராமப் பொருட் களான சோப்பு, தேன், ஜவ் வாது, சாம்பிராணி, பாரம் பரிய அரிசி வகைகளான கருப்பு கவுனி, மாப்பிள்ளை சம்பா, சீரக சம்பா மற்றும் கம்பு, சாமை, தினை, கேழ் வரகு உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்யப்படு கின்றன. எனவே, பொது மக்கள், தமிழ்நாடு கதர் கிராம தொழில் வாரியத்தின் மூலம் விற்பனை செய்யப்படும் பொருட்களை வாங்கி ஆத ரவு நல்க வேண்டும் என்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், கதர் கிராம தொழில்கள் உதவி இயக்குநர், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெற்றிவேந்தன் உட்பட பலர் பங்கேற்றனர்.