districts

img

முல்லைப்பெரியாறு அணை அருகே சுரங்கப்பாதையில் அதிகாரிகள் ஆய்வு

தேனி, ஏப்.19- முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் செல்லும் சுரங்கப்பாதையில் கண்காணிப்பு பொறி யாளர் பழனிச்சாமி தலைமையிலான குழு வினர் புதனன்று ஆய்வு செய்தனர். முல்லைப் பெரியாறு அணையின் நீர்த்தேக்கப்பகுதியான தேக்கடியில் இருந்து தமிழகப்பகுதிக்கு நீர் கொண்டு செல்லப்படுகிறது. இதற்காக 1.5 கிமீ.தூரம்  திறந்தவெளி வாய்க்காலிலும், 1.98 கி.மீ. தூரம் சுரங்கப்பாதை வழியாகவும் தண்ணீர் செல்கிறது. பின்பு போர்பே அணைக்கு வரும் இந்த  தண்ணீர் 4 ராட்சத குழாய்கள் மற்றும் இரைச்சல் பாலம் வழியாக தமிழகப் பகு திக்கு கொண்டு செல்லப்படுகிறது.இந் நிலையில் கண்காணிப்புப் பொறியாளர் ஏ. பழனிச்சாமி தலைமையிலான குழுவினர்  புதனன்று சுரங்கப்பாதையை பார்வை யிட்டு ஆய்வு செய்தனர். செயற்பொறியாளர் ஜே.சாம்இர்வின், மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருணாகரன், உதவிப் பொறியாளர் தினேஷ், நீர்வளத்துறை அலுவலர்கள் ராஜகோபால், நவீன்குமார், அபிநயா, வாசுதேவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுரங்கப்பாதையில் உள்ள கான்கி ரீட்டின் தன்மை, பழுது ஏற்பட்டுள்ளதா, மின்இணைப்புகள் சரியாக உள்ளதாக என்பது குறித்து ஆய்வு செய்தனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகை யில், தற்போது தண்ணீர் குறைவாக  வெளியேற்றப்படுவதால் சுரங்கப்பாதை யில் சென்று ஆய்வு நடத்தப்பட்டது. சிறிய  பழுதுகள் சில இடங்களில் உள்ளன. அவற்றை செப்பனிடுவதற்கான பணிகள்  விரைவில் தொடங்கும் என்று தெரிவித்த னர்.