districts

img

இராமேஸ்வரத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் நூதன ஆர்ப்பாட்டம்

சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை அதிகரித்து மக்களை வதைக்கும் ஒன்றிய மோடி அரசைக் கண்டித்து புதனன்று இராமேஸ்வரத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தாலுகாக்குழு உறுப்பினர் ஏ.சகாயம் தலைமை வகித்தார். தாலுகா செயலாளர் ஏ.ஆரோக்கியநிர்மலா, தாலுகா தலைவர் க.வெங்கடேஸ்வரி, தாலுகா பொருளாளர் கே.சுமதி மற்றும் பலர் பங்கேற்றனர்.