districts

img

நிலக்கோட்டையில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா

சின்னாளப்பட்டி, செப்.18- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் விளாம்  பட்டி அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் எச்என்யூபிஆர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவியர்களுக்கு தமிழக அரசின் விலை யில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. தலைமையாசிரியர் சேவியர் லீலா ரோஸ்லி தலைமை  வகித்தார். பள்ளி நிர்வாகத் தலைவர் சுசீந்திரன், செய லர் முரளிதரன், திமுக பேரூர் செயலாளர் ஜோசப் கோவில்  பிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாக உறுப்பினர் சுரேஷ்பாபு வரவேற்றார்.  நிகழ்ச்சியில் திமுக மேற்கு ஒன்றியச் செயலாளர் வழக்கறிஞர் மணிகண்டன் 500-க்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதி வண்டிகளை வழங்கினார். பேரூராட்சி மன்றத் தலை வர் சுபாஷினி பிரியா கதிரேசன், துணைத் தலைவர் எஸ்.பி.முருகேசன், கவுன்சிலர் காளிமுத்து, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் செல்வராஜ், வார்டு செயலா ளர் முருகேசன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவ -  மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் முதுகலை ஆசிரியர் சுபாராணி நன்றி கூறி னார்.