நாகர்கோவில், ஜூலை 17- நாடு முழுவதும் தேசிய மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வு ஜூலை 17 மதியம் நடைபெற்றது . கன்னியா குமரி மாவட்டத்தில் 6 மையங்களில் தேர்வு நடைபெற்றது. தேர்வு எழுதுவதற்கு 4473 பேர் விண்ணப்பித்திருந்தனர். நாகர்கோ வில் ஒழுகினசேரி ராஜாஸ் இண்டர் நேஷனல் பள்ளி, சுங்கான்கடை வின்ஸ் கிறிஸ்டியன் கல்லூரி, தோவாளை லயோலா பொறியியல் கல்லூரி, ஆரல் வாய்மொழி டி. எம். ஐ. பொறியியல் கல்லூரி, இறச்சகுளம் அமிர்தா பொறி யியல் கல்லூரி, கோணம் கேந்திர வித் யாலயா பள்ளி ஆகிய 6 மையங்களில் தேர்வு நடந்தது. தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் மதியம்தான் தேர்வு என்றாலும் காலை யிலேயே தேர்வு மையத்திற்கு வர தொடங்கினார்கள். இதனால் தேர்வு மையங்களின் முன்பு கூட்டம் அலை மோதியது. தேர்வு எழுத வந்த பெண் களை அவரது பெற்றோர் மற்றும் உற வினர்கள் அழைத்து வந்திருந்தனர். கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தேர்வு எழுத வந்த மாணவ மாணவிகள் தேர்வு மையத் திற்கு வெளியே காத்திருந்தனர். தேர்வு எழுத வந்த மாணவ-மாணவிகளை பலத்த பரிசோதனைக்கு பிறகு தேர்வு மையத்திற்குள் அனுமதித்தனர். தேர்வு எழுத வந்த மாணவ-மாணவி கள் தேர்வு கூடத்திற்கான விண்ணப்பத் துடன் தற்பொழுது எடுத்த புகைப் படத்தை ஒட்டியிருப்பதை பரிசோ தித்து தேர்வு மையத்திற்குள் அனும தித்தனர். தேர்வு மையத்திற்கு வந்தவர்கள் முக கவசம் அணிந்திருந்தனர். மாணவ- மாணவிகளுக்கு உடல் வெப்ப பரி சோதனை தெர்மல் ஸ்கேனர் மூலமாக மேற்கொள்ளப்பட்டது. மேலும் கை கழுவும் திரவங்களும் வழங்கப்பட்டது. மதியம் தேர்வு தொடங்கி மாலை வரை நடைபெற்றது . தேர்வு மையத்திற்கு வெளியே பலத்த காவல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.