இராமநாதபுரம், மார்ச்.14- இலங்கைக்கான இந்திய துணை தூதர், இந்திய தூதரக ஆலோசகரை சந்தித்து இராம நாதபுரம் நாடாளுமன்ற உறுப்பி னர் நவாஸ்கனி தமிழக மீனவர் கள் பிரச்சனை குறித்து ஆலோசனை நடத்தினார். இலங்கையில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, இந்திய தூதர கத்தில் இந்திய துணை தூதர் வினோத் ஜக்கப், இந்திய தூதரக ஆலோசகர் கௌஸ்லேந்திர குமார் ஆகியோரை சந்தித்தார். சந்திப்பின்போது, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விடுவிப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து ஆலோ சனை நடத்தினார்.