districts

மதுரை முக்கிய செய்திகள்

ரயில் மோதி இசைக்கலைஞர் பலி

ஒட்டன்சத்திரம், ஏப்.11-  ஒட்டன்சத்திரத்தில் ரயில் மோதி இசைக்கலைஞர் இறந்தார். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காந்திநகர் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சரவணன் மகன் ஆனந்த் (வயது 21). இவர் இசைக்கலைஞராக வேலை பார்த்து வந்தார்.  கடந்த சில நாட்களாக பெங்களூருவில்ல் வேலை பார்த்து வந்த நிலையில் ஊர் திருவிழாவுக்காக கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒட்டன்சத்திரம் வந்தார்.  நேற்று முன்தினம் இரவு ஒட்டன்சத்திரம் பேருந்து  நிலையம் பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளத்தை  அருகே நடந்து சென்றார்.அப்போது மேட்டுப்பாளை யத்தில் இருந்து நெல்லை நோக்கி சென்ற ரயில் இவர் மீது மோதியது.  இதில் ஆனந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  நேற்று காலை அப்பகுதியில் நடந்து சென்றவர்கள் இதைப் பார்த்து பழனி ரயில்வே போலீசாருக்கு தக வல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து  அவரது உடலை கைப்பற்றி ஒட்டன்சத்திரம் அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர்.

லாரி மோதி பெண் பலி

தேனி, ஏப்.11- மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர்  பாண்டி யன். இவருக்கு  அன்னலட்சுமி என்ற மனைவியும் ஒரு  மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.தங்களது குடும்பத்தில் ஒரு விசேஷ நிகழ்ச்சி நடத்துவதற்காக ஆண்டிபட்டிக்கு தங்களது குடும்ப ஜாதகங்களை  ஜோதிடரிடம்  பார்ப்ப தற்காக ஒரு இருசக்கர வாகனத்தில் பாண்டியன் மனைவி யையும் தனது மகனையும் அழைத்து வந்தார்  ஆண்டிபட்டி  வந்து ஜாதகம்  பார்த்துவிட்டு இருசக்கர  வாகனத்தில் உசிலம்பட்டிக்கு  திரும்பிச் செல்லும்போது ஆண்டிபட்டி தெப்பம்பட்டி சாலைப்பிரிவு அருகே  பின்  னால் வந்த டிப்பர்லாரி இருசக்கர வாகனத்தின் பின்புறமாக மோதியது. இதில்  நிலைதடுமாறி  லாரியின்  உள்ளே விழுந்து  சக்கரத்தில்  சிக்கி அன்னலட்சுமி  சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார்.  இதையடுத்து சம்பவ  இடத்திற்கு வந்த போலீசார்   வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை பிடித்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். விபத்து நடந்து ஒரு மணி நேரம் கழிந்து  இறந்த உடலை எடுத்துச் செல்ல அமரர் ஊர்தி  தாமதமாக வந்த தால் அதுவரை  கடும் வெயிலில் சாலையில்  இறந்த உட லோடு காத்திருந்த குடும்பத்தினரும் உறவினர்களும் பெரும் வேதனை அடைந்தனர்.

கூடலூரில் பெண் வியாபாரியிடம் செல்போன், பணம் பறிப்பு

தேனி, ஏப்.11- கூடலூரில் பெண் வியாபாரியிடம் இருசக்கர வாக னத்தில் வந்த மர்ம நபர்கள் செல்போன் பணம் பறித்தது  தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள். தேனி மாவட்டம், கூடலூர் 6-வது வார்டு ஓடைக்கா ரத்தெருவை சேர்ந்த முனியாண்டி மனைவி ஷீலாதேவி (34). இவர் கூடலூர் காய்கறி சந்தையில் காய்கறிகள் விற்பனை செய்து வருகிறார். சம்பவத்தன்று வியாபா ரத்தை முடித்துவிட்டு துணிப்பையில் ரூ.6500 பணம், செல்போன், ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை வைத்துக்  கொண்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். பழனிவேல் பிள்ளை தெருவில் நின்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரி யாத வாலிபர் அவர் வைத்திருந்த பையை பறித்து கொண்டு  சென்றுவிட்டார்.  இதுகுறித்து ஷீலாதேவி கூடலூர் வடக்கு காவல்  நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.

நகை பறித்தவருக்கு 3 ஆண்டு சிறை

சிவகாசி, ஏப்.11- சிவகாசி சாட்சியாபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ் மனைவி கண்மணி (37). அதே பகுதியில் மருந்துக் கடை  நடத்தி வருகிறார். கடந்த 2017 டிசம்பர் 16 அன்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு புறப்பட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் கண்மணி கழுத்தில் கிடந்த 8 பவுன் தாலிச் சங்கிலி மற்றும் கையில்  வைத்திருந்த பணப்பையை பறித்துக்கொண்டு தப்பி சென்றுள்ளார். எனவே, இதுகுறித்து கண்மணி கொடுத்த புகாரின் பேரில் சிவகாசி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து  சாட்சியாபுரத்தை சேர்ந்த அழகுராஜா (27) உள்படமூவ ரைக் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு ராஜேஷ்கண்ணன் அழகுராஜாவுக்கு 3 ஆண்டு சிறை  தண்டனை மற்றும், ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.  மேலும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மற்ற இரு வரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

மாணவரிடம் செல்போன் பறிப்பு 

மதுரை, ஏப்.11-  மதுரை ஞான ஒளிவுபுரம் பகுதியை சேர்ந்தவர் மருத்து வக்கல்லூரி மாணவரான கவின் வில்சன்.இவர் ஆத்தி குளம் பகுதியில் நத்தம் பறக்கும் பாலத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது 3 நபர்கள் மாணவரை திசை  திருப்பி செல்போனை பறித்துச்சென்றனர். இச்சம்பவம் குறித்து தல்லாகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பழனியில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்

பழனி, ஏப்.11-  பழனி முருகன் கோவிலில் பணியாற்றும் 300 க்கும்  மேற்பட்ட தூய்மை பணியாளர்கள், சம்பள உயர்வு  கோரி கோவில் தண்டபாணி நிலையத்தில் செவ்வாய்க்கிழ மையன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். கோயில் நிர்வாகம்  உடனே பேச்சுவார்த்தை நடத்தியது. வரும் மே மாதம் முதல் ஊதிய உயர்வு வழங்கப்படுவதாக உறுதி கொடுத்த பின்பு போராட்டம் கைவிடப்பட்டது.

ஆளுநர் ரவியே வெளியேறு: தேனியில் இன்று கண்டன இயக்கம்

தேனி, ஏப்.11- மாமேதை காரல் மார்க்சை அவதூறாகவும், ஆர்.எஸ்.எஸ். கருத்துக்களை தொடர்ந்து பேசிவரும், நீட்  விலக்கு உட்பட   தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட 20க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு  ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தும்  ஆளுநர் ஆர்.என்.ரவியை தமிழ்நாட்டை விட்டு வெளியேறு என்ற முழக்கத்துடன் புதன்கிழமை மாலை 4.மணிக்கு தேனி பழைய பேருந்து நிலையம் அருகே கண்டன இயக்கம் நடைபெறுகிறது . திமுக தோழமை கட்சி தலைவர்கள்  ஆலோ சனை கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் திங்களன்று  இரவு நடைபெற்றது .மாவட்ட கடமலை - மயிலை ஒன்றிய  செயலாளர் வழக்கறிஞர் ஓ.சுப்பிரமணி தலைமை வகித்தார் .கூட்டத்தில்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணாமலை, திமுக தேனி வடக்கு மாவட்ட நிர்வாகி டி.ராஜசேகர், சிபிஐ மாவட்டச் செயலாளர் கே.பெருமாள் உட்பட கலந்து கொண்டனர்.

சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்தவருக்கு 7 ஆண்டு சிறை

திருவில்லிபுத்தூர், ஏப்.11- இராஜபாளையம் அருகே இலுப்பப் பட்டியைச் சேர்ந்தவர் ஈஸ்வரன்(38). கடந்த  ஜனவரி 21 ஆம் தேதி மது போதையில் இருந்த ஈஸ்வரன் அப்பகுதியில் விளை யாடி கொண்டு இருந்த 4 வயது சிறுமிக்கு  பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகா ரில் ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிவு செய்து ஈஸ் வரனை கைது செய்தனர்.  வழக்கு விசாரணை திருவில்லி புத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் ஈஸ்வரனுக்கு 7 ஆண்டுகள் சிறை  தண்டனை மற்றும் ரூ.2 ஆயிரம் அபராதம்  விதித்து நீதிபதி பூர்ண ஜெயஆனந்த் தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக அர சுக்கு பரிந்துரை செய்து உத்தரவிட்டார்.

தேனி அருகே அரசு நிலம் அபகரிப்பு தொடர்பாக  கிராம நிர்வாக அலுவலர் உள்பட 5 பேர் கைது

தேனி, ஏப்.11- கடந்த அதிமுக ஆட்சியில் அரசுக்கு சொந்த மான நிலங்களுக்கு முறைகேடாக பட்டா வழங்கிய விவகாரத்தில் மேலும் கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ் உட்பட 5 பேரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர். கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில்  தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம், வடவீர நாயக்கன்பட்டி, தாமரைக்குளம் ,கெங்குவார்பட்டி, ஜெயமங்கலம் பிட் 2,மேல் மங்கலம் ஆகிய வரு வாய் கிராமங்களில் அரசுக்கு சொந்தமான புறம் போக்கு நிலங்கள் ,ஓடை உள்ளிட்ட நீர்நிலை புறம்போக்குகள் 182 ஏக்கருக்கு மேல் அதிமுக ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ் மற்றும் அவ ரது உறவினர்கள் ,பெரியகுளம் வட்டாட்சியர் பினாமி கள், சோலார் கம்பெனி உரிமையாளர் ,சர்வேயரின் உறவினர்கள் பெயரில் வருவாய் துறையினரால் முறைகேடாக பட்டா வழங்கப்பட்டது. இதுகுறித்து பெரியகுளம் சார் ஆட்சியர் ரிஷப்  விசாரணை மேற்கொண்டார். இதில் வடவீரநாயக் கன்பட்டியில் ரூ.1.44 கோடி மதிப்புள்ள 1.09 ஏக்கர், தாமரைக்குளத்தில் 60 ஏக்கர், கெங்குவார்பட்டியில் 12 ஏக்கர் என மொத்தம் 182 ஏக்கர் அரசு நிலங்  களை அதிகாரிகள் துணையுடன் சிலர் அபகரித்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து 182 ஏக்கர்  நிலங்களுக்கு வழங்கிய பட்டாக்களை முந்தைய  ஆட்சியர் முரளிதரன் ரத்து செய்தார். இதனை  தொடர்ந்து அந்த நிலங்கள் மீண்டும் அரசுடைமை யாக்கப்பட்டன. மோசடி நிலங்கள் ‘அ’ பதிவேட்டில் கணினி மூலம் திருத்தம் செய்து மோசடி பட்டா வழங்கப்பட்டதும், அதன்மூலம் அரசு நிலங்களை அபகரிக்க அதிகாரிகள் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இந்த மோசடி தொடர்பாக பெரிய குளம் ஆர்.டி.ஓ.க்களாக பணிபுரிந்த ஜெயபிரதா, ஆனந்தி, தாசில்தார்கள் ரத்தினமாலா, கிருஷ்ண குமார், மண்டல துணை தாசில்தார்கள் மோகன்ராம், சஞ்சய் காந்தி, நில அளவையர்கள் பிச்சைமணி, சக்திவேல், வடவீரநாயக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ், நில அளவை உதவியாளர் அழகர், மண்டலதுணை தாசில்தாரின் உதவியாளர் ராஜேஸ்கண்ணன், நிலத்தை அபகரித்த அதிமுக பிரமுகர் அன்னப்பிரகாஷ், முத்துவேல் பாண்டியன், போஸ் உள்ளிட்ட 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 7 பேரை கைது செய்தனர். அவர்கள் தற்போது ஜாமீனில் வெளியில் உள்ளனர். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.  தலைமறைவாக இருந்த விஏஓ சுரேஷ் உள்பட 5 பேரை தேனி சிபிசிஐடி அலுவலகத்தில் வைத்து துணைக்காவல் கண்காணிப்பாளர் சரவணக்குமார், ஆய்வாளர் சித்ரா ஆகியோர் கொண்ட போலீசார் விசாரணை நடத்தினர். இதில் விஏஓ சுரேஷ் உள்பட நிலத்தை வாங்கியவர்கள் என 5 பேரும் நில மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனைத்  தொடர்ந்து இவர்கள் ஐந்து பேரும் கைது செய்யப்பட்டு தேனி நீதித்துறை நடுவர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி லலிதா ராணி இவர்களை வரும் 25 ஆம் தேதி வரை நீதி மன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

“தமிழ்நாடு காவல்துறை“ என   போலி  முகநூல் பக்கம் நடத்தி தவறான  தகவல்களை பரப்பியவர் கைது

விருதுநகர், ஏப்.11- தமிழ்நாடு காவல்துறையின் பெயரில் போலியான முகநூல் பக்கத்தை உருவாக்கி அதில் ஏராளமானேரை இணைத்து தவறான தகவல்களை பரப்பிய நபரை போலீ சார் கைது செய்தனர்.  விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல்லைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன்.  பட்டப் படிப்பு முடித்துள்ள இவர்,  கட்டிட வேலை செய்து வரு கிறார்.   இந்நிலையில்,   Tamil Nadu Police என்ற பெயரில்  போலியாக முகநூல் பக்கம் ஒன்றை உருவாக்கி யுள்ளார். முகப்பில் தமிழ்நாடு காவல்துறையின் இலட்சி னையையும் வைத்துள்ளார். எனவே,  இது உண்மையான முகநூல்  பக்கம் என நம்பி, சுமார் 46 ஆயிரம் பேர் இந்தக்  குழுவில் இணைந்துள்ளனர். மேலும், அதில் காவல்துறை பற்றிய பல தவறான தகவல்களையும் வெளியிட்டதாக கூறப்படுகிறது.  இதுகுறித்து,  விருதுநகர் மாவட்ட சைபர் க்ரைம்  பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை யடுத்து,  முகநூலில்  தமிழ்நாடு காவல் துறை சின்னத்தை  முகப்பு படமாக வைத்திருந்த அந்தக் குழுவை ஆய்வு செய்தனர்.     TAMIL NADU POLICE என்று பெயரிடப்பட்டுள்ள அந்தப் போலியான  முகநூல் பக்கத்தில்  காவல்துறைக்கு தொடர்பற்ற போலியான பல்வேறு பதிவுகளும் இருந்துள்  ளது. இந்த முகநூல் பக்கத்தை  நிர்வகிப்பவர்  (Admin)  யார்? என்பது குறித்து துரிதமாக விசாரணை மேற்கொண்ட னர். அந்த நபர், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே  திருத்தங்கலைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பதும், அவர்  போலீஸ் இல்லையென்பதும்  விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்த  சைபர் க்ரைம் போலீசார்,  தமிழ்ச்செல்வனை கைது செய்தனர்.   பின்பு, விருதுநகர் குற்றவியல் நீதிமன்றம் எண் 1  நீதித்துறை நடுவர் கவிதா முன்னிலையில் தமிழ்ச்செல் வனை ஆஜர் படுத்தினர். இதையடுத்து அவரை வரும்  ஏப்ரல் 25 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

எவரெஸ்ட் சிகரம் ஏறும்  தகுதி பெற்றவருக்கு  மாணிக்கம் தாகூர் எம்.பி. வாழ்த்து

விருதுநகர், ஏப்.11-  விருதுநகர் மாவட்டம் ஜோகில்பட்டியைச் சேர்ந்த முத்தமிழ்ச்செல்வி, எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கு தகுதி பெற்றுள்ளார். விருதுநகர் மக்களவை உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூர், அவருக்கு வாழ்த்துக்களை தெரி வித்துள்ளார்.  அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு:  33 வயதில் எவரெஸ்ட் சிகரம் ஏறும் தமிழ்ப் பெண்  என்ற பெருமையைப் பெற்றுள்ள தங்களுக்கு மனம்  நிறைந்த வாழ்த்துக்கள். தங்கள் முயற்சி தமிழகத்துக்கே பெருமை சேர்த்துள்ளது. கடந்த மகளிர் தினத்தன்று, ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள 155 அடி உயர மலை உச்சி யில் இருந்து கண்களை கட்டிக் கொண்டு 58 விநாடியில்  இறங்கி சாதனை படைத்தீர்கள். இதேபோன்று எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கு முன்னோட்டமாக, காஷ்மீரில் லடாக் பகுதியில் சுமார் 5,500 அடி உயர பனிமலை உச்சியை அடைந்து சாதித்  துள்ளீர்கள். தற்போது எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கான தகுதியைப் பெற்றிருக்கும் தங்களை வாழ்த்துகிறேன். தங்களின் முயற்சிக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு ரூ.10 லட்சம் வழங்கியது பாராட்டுக்குரி யது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மதுரையில் கொரோனா  தடுப்பூசி தட்டுப்பாடு

மதுரை, ஏப்.11-  கொரோனா நோய் தொற்று மீண்டும் பரவ துவங்கி யுள்ள நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையில் நோய் தொற்று சிகிச்சைக்காக தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த  நிலையில் கொரோனா நோய் தொற்றை தடுப்ப தற்கான தடுப்பூசிகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்றும்  கடந்த ஏப்ரல் - 1ஆம் தேதி முதல் இந்த தட்டுப்பாடு உள்ளது என்றும்  அங்கு பணியாற்றும் சில மருத்துவத்துறை ஊழி யர்கள் கூறுகிறார்கள்.  இதனால் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்க ளுக்கு பணிக்கு  செல்லக்கூடியவர்கள் தடுப்பூசி போடா முடியாமல் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே  தட்டுப்பாடு போக்கிட மருத்துவத் துறை நிர்வாகம் உட னடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.