districts

மதுரை முக்கிய செய்திகள்

தண்ணீர் திறப்பால் குறையும் முல்லைப்பெரியாறு நீர்மட்டம் 

தேனி, ஜன.28- நீர்ப்பிடிப்பு பகுதியில் மழையின்றி பாசனத்திற்கு தண்ணீர் திறப்பால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே மாதத்தில் 13 அடி குறைந்துவிட்டது . பருவமழை காலத்தில் நீர்வரத்து அதிகரித்து, அணை யின் நீர்மட்டம் 142 அடிவரை உயர்ந்தது. அதனைத் தொடர்ந்து சில நாட்கள் அதே நீர்மட்டத்தில் நிலைநிறுத்தி அதிகாரிகள் கண்காணித்தனர்.தற்போது தமிழக விவசா யத்திற்கு அணையிலிருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப் பட்டு வருகிறது. தற்போது மழை ஓய்ந்த நிலையில் அணைக்கு 107 கன அடி நீர் மட்டுமே வருகிறது. ஆனால்  கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் கடந்த  மாதம் 142 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் ஜனவரி  28 அன்று காலை 129.15 அடியாக குறைந்துள்ளது. ஒரே  மாதத்தில் சுமார் 13 அடி குறைந்துள்ளது குறிப்பிடத்தக்  கது. அணையிலிருந்து 1167 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 52.66 அடியாக உள்ளது. 879  கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட் டம் 49.75 அடியாக உள்ளது. 38 கனஅடிநீர் வருகிறது. 80 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணை யின் நீர்மட்டம் 104.14 அடியாக உள்ளது. நீர் வரத்து இல்லாத நிலையில் 25 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

கிராமத்தில் குடியரசு தினவிழா 

திண்டுக்கல், ஜன.28- திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தோட்ட னூத்து கிராமம் ரெண்டலப்பாறையில் 74வது குடியரசு தின  விழா நடைபெற்றது. இந்த ஊர் பெரியவர் சாமுவேல்  தேசிய கொடியேற்றினார். முன்னாள் ஊராட்சித்தலைவர் ஆரோக்கியசாமி முன்னிலை வகித்தார். சிபிஎம் மாவட் டக்குழு உறுப்பினர் தா.அஜாய்கோஷ், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஜோசப், பவுல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

வீட்டின் கதவை உடைத்து  தங்கம்-வைர நகைகள் கொள்ளை 

சிவகாசி, ஜன.28- சிவகாசியில் பூட்டிய வீட்டின் கதவை உடைத்து  தங்க, வைர நகைகளை மர்ம நபர்கள் கொள்ளைய டித்துச் சென்றனர். சிவகாசி தேவி நகரைச் சேர்ந்த சொக்கலிங்கம் மகன்  பத்மநாபன்(67). இவர் தனது மனைவி மற்றும் உறவினர்  களுடன் திருப்பதி சென்றுள்ளார். திரும்பி வந்து பார்த்த  போது வீட்டின் முன் பக்க கதவு மற்றும் பூட்டு உடைக்கப்  பட்டிருந்ததாம். இதனால் அதிர்ச்சியடைந்த பத்மநாபன், உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருநத 90 பவுன்  தங்க நகைகள், 3 ஜோடி வைரக் கம்மல்கள் ரொக்கம் ரூ. 1லட்சம் ஆகியவை மாயமானது தெரியவந்தது. எனவே, இதுகுறித்து பத்மநாபன், சிவகாசி நகர்  காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.

பெரியகுளத்தில் மனைவி கொலை? கணவரை கைது செய்து விசாரணை

தேனி, ஜன.28- பெரியகுளத்தில் மனைவி மரணத்தில் சந்தேகம டைந்த காவல்துறையினர் கணவரை கைது செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள். அரவக்குறிச்சியை சேர்ந்த ரம்ஜான் பேகம் (வயது 36) என்பவர் பெரியகுளம் வடகரை விஆர்பி நாயுடு தெரு வில் குடியிருந்து வந்தார். இவரும் திண்டுக்கல் மாவட்டம்  வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக் என்பவ ரும் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம்  செய்து பெரியகுளத்தில் தம்பதிகளாக வாழ்ந்து வந்த னர். அபுபக்கர் சித்திக் வி. ஆர். பி நாயுடு தெருவில் மளிகை  கடை வைத்து நடத்தி வருகிறார் . இவர்களுக்கு இரண்டு  பெண் குழந்தைகள் உள்ளனர். இதனிடையே கணவன், மனைவி இருவருக்கும் இடையே கடந்த இரண்டு தினங்க ளுக்கு முன்பாக கருத்து வேறுபாட்டால் சண்டை நடந்த தாக கூறப்படுகிறது.இந்நிலையில் வெள்ளியன்று இரவு  ரம்ஜான் பேகம் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இது குறித்து பெரியகுளம் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து வந்த காவல்துறையினர் இறந்து கிடந்த ரம்ஜான் பேகத்தின் உடலை மீட்டு பிரேத  பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.மேலும் ரம்ஜான் பேகத்தின் மரணத்தில் மர்மம் இருப்பதால் அவ ரது கணவர் அபுபக்கர் சித்திக்கை பெரியகுளம் காவல்  துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

விருதுநகரில் பிரதான குழாயில் உடைப்பு : தினசரி வீணாகும் 2 லட்சம் லிட்டர் குடிநீர்

விருதுநகர், ஜன.28- விருதுநகரில் பிரதான குடிநீர் குழாய் களில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட் டுள்ளதால் நாள்தோறும் 2 லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது. விருதுநகரின் முக்கிய குடிநீர் ஆதார மாக இருந்து வருவது ஆணைக்குட்டம் நீர்த்தேக்கம். இங்கிருந்து விருதுநகர் நக ராட்சி பகுதியில் வசிக்கும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு குடிநீர்  வழங்கப்பட்டு வருகிறது. இப்பகுதியிலி ருந்து நாள்தோறும் சராசரியாக 30 லட்சம் லிட்டர் குடிநீர் எடுக்கப்பட்டு பிரதான குழாய்  கள் வழியாக விருதுநகரில் மதுரை சாலை யில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான நீர்த்  தேக்கத் தொட்டி வளாகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கிருந்து நகரின் பல்வேறு பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகளுக்கு குடிநீர் அனுப்பி வைக்கப்பட்டு குடியிருப்புகளுக்கு விநி யோகம் செய்யப்படுகிறது. இந்தநிலையில், விருதுநகரில் உள்ள பழைய சிவகாசி சாலை முதல் புதிய சிவ காசி சாலை இணைப்பு வரை 5 இடங்க ளில் பிரதான குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நாளொன்றுக்கு 2லட்சம் லிட்டர் குடிநீர் வரை வீணாகி வரு கிறது. இந்த உடைப்புகளை சீர் செய்யக் கோரி அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் நகராட்சி நிர்வாகத்திற்கு பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர். என்ன கார ணத்தினாலோ, இதுவரை எவ்வித நடவ டிக்கையும் நகராட்சி நிர்வாகம் மேற் கொள்ளவில்லை. இதனால், குடிநீர் தின சரி வீணாகி வருவது தொடர் கதையாகி வருகிறது. எனவே, மாவட்ட ஆட்சித் தலைவர் உட னடியாக விருதுநகரில் உள்ள பழைய சிவ காசி சாலையில் உள்ள குழாய் உடைப்பு களை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூலி உயர்வு கேட்டு  விசைத்தறி தொழிலாளர்கள்  வேலைநிறுத்தம் அறிவிப்பு

இராஜபாளையம், ஜன.28- இராஜபாளையம் வட்டம் தளவாய்புரம், சேத்தூர் பகுதிகளில் விசைத்தறி தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. ஏராளமான தொழிலாளர்கள்  பணிபுரிந்து வருகின்றனர்.  தற்போது ஒப்பந்தப்படி  கூலி உயர்வு வழங்க வேண்டும் ஆனால் விசைத்தறி உரிமையாளர்கள் மூன்று  கட்டமாக பேச்சுவார்த்தை நடத்தியும் கூலி உயர்வு வழங்க  முன்வரவில்லை இந்நிலையில் சனிக்கிழமை அன்று தள வாய்புரம் பகுதியில் சிஐடியு, ஏஜடியுசி சார்பில் விசைத்  தறி தொழிலாளர்களுக்கான மகாசபை கூட்டம் நடை பெற்றது.  இதில் விசைத்தறி உரிமையாளர்கள்  கூலி உயர்வு  வழங்க முன் வராததால் அவர்களை கண்டித்து விசைத்  தறி தொழிலாளர்கள் அனைவரும் வரும் திங்கட்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவ தாக முடிவு எடுத்து அறிவித்துள்ளனர்.  கூட்டத்தில் சிஐடியு, தமிழ்நாடு விசைத்தறி தொழி லாளர் சங்க மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் ,கைத்தறி  தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ராமர், ராஜ் ஏஐடி யுசி சார்பில் கணேசமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மாணவர்கள் மயக்கம்

நாகர்கோவில், ஜன. 28 கன்னியாகுமரியில் கொட்டா ரம் அரசுமேல்நிலைப்பள்ளி, கன்னியாகுமரி புனித அந்தோணி யார் மேல்நிலைப்பள்ளி, நாகர் கோவில் ஸ்காட் கிறிஸ்தவ மேல் நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த  தேசிய மாணவர்படையினர் மாண வர்கள் பங்கேற்ற தூய்மை முகாம் கன்னியாகுமரி கடற்கரையில் வெள்ளியன்று நடந்தது.  அரசுப்  பள்ளிகளைச் சேர்ந்த 175 மாண வர், மாணவிகள் பங்கேற்றனர். வெள்ளிக்கிழமை காலை வழங்கப்  பட்ட உணவைச் சாப்பிட்டவர்களில் 43 மாணவர், மாணவிகளுக்கு திடீ ரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.  அவர்களில் 13 பேர் ஆசாரிப்பள்ளம்  அரசு மருத்துவமனையிலும், 30  பேர் கொட்டாரம் அரசு மருத்துவ மனையிலும் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

அருப்புக்கோட்டை சாலையில்  8 எல்.இ.டி விளக்குகள் அமைத்திடுக! காங்கிரஸ் வலியுறுத்தல்

விருதுநகர், ஜன.,26- விருதுநகர் அருப்புக்கோட்டை சாலையில் மின் கம்பங்களுடன் எல்.இ.டி விளக்குகள் அமைத்து தர வேண்டுமென நகர காங்கிரஸ் கமிட்டி  கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் நகரத் தலை வர் டி.ஜி.நாகேந்திரன், விருதுநகர் மக்களவை உறுப்பினர் ப.மாணிக்கம் தாகூருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியதாவது : விருதுநகரின் பிரதான சாலையாக இருந்து வருவது அருப்புக் கோட்டை சாலை. இங்கு ரயில்வே மேம்பாலம் உள்ளது. அதில் விளக்கு கள் உள்ளன. ஆனால், மேம்பாலம் முடியும் பகுதியில் இருந்து அல்லம்  பட்டி முக்கு ரோடு வரை தெரு விளக்குகள் இல்லை. இதனால், அப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், அவ்வழியே இரவு  நேரத்தில் செல்லும் பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், விபத்துகள் ஏற்படும் நிலை யும் உள்ளது. எனவே, அப்பகுதியில் 4 மின் கம்பங்கள் அமைத்து அதில்  90 வாட்ஸ் கொண்ட எல்.இ.டி விளக்குகள் 8 பொருத்த வேண்டும். இதற்கு நாடாளுமன்ற உறப்பினர் நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்திட வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.