விருதுநகர், டிச.5- விருதுநகர் மாவட்ட சுகாதாரத்துறை அலு வலகத்தின் முன் பகுதியில் பகல் நேரங்களில் வரும் பொது மக்களை பெரிய, பெரிய கொசுக்கள் கடிக்கின்றன. இந்நிலையில், கொசுக்கடி தாங்க முடியாமல் கொசுவர்த்தி யுடன் ஆசிரியர் சங்கத்தினர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலு வலக வளாகத்தில் மாவட்ட சுகாதாரத்துறை அலுவலகம் இயங்கி வருகிறது. இதன் மேல் பகுதியில் மாவட்ட கல்வித்துறை, புள்ளியி யல் துறை உள்ளிட்ட பல்வேறு அலுவல கங்கள் செயல்பட்டு வருகின்றன. கொசுக்களை கட்டுப்படுத்துதல், கொசுப் புழுக்களை கட்டுப்படுத்துதல், பொது மக்கள் நோயால் பாதிக்கப்படும் பகுதிகளை கண்ட றிந்து அவர்களுக்கு நோய் தடுக்கும் பணி களை செய்வது மாவட்ட சுகாதாரத்துறை யின் முக்கியப் பணியாகும். இந்தநிலையில், மாவட்ட சுகாதாரத் துறை அலுவலகப் பகுதியிலேயே பகல் நேரத்தில் பொது மக்களை கொசுக்கள் கடித்து வருகின்றன. இதனால், அங்கு வரும் பொது மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ள னர். ஏனெனில் பகல் நேரத்தில் கடிக்கும் ஏடிஎஸ் வகை கொசுக்களால் தான் டெங்கு, சிக்குன் குன்யா உள்ளிட்ட நோய் பரவும் என சுகாதாரத்துறையினர் ஊர்தோறும் பிரச்சா ரம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், திங்களன்று காலை, மாவட்ட சுகாதாரத்துறை அலுவலகத்தின் எதிரே ஒருங்கிணைந்த பள்ளி கல்வித் திட்ட மாற்றுத் திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஆசி ரியர்கள் கொசுக்கடி தாங்க முடியாமல் கொசு வர்த்திச் சுருளை கொளுத்தி வைத்து போராட் டம் நடத்தினர். எனவே, மாவட்ட ஆட்சியர் அலுவல வளா கத்தில் உள்ள மாவட்ட சுகாதாரத்துறை அலு வலகம் இயங்கும் பகுதியிலேயே அதிக அள வில் கொசுக்கள் உள்ளதே. அதையே சுகா தாரத்துறையினரால் கட்டுப்படுத்த முடிய வில்லையே? பின்பு, எப்படி மாவட்டம் முழு வதும் உள்ள கொசுக்களையும், அதன் மூலம் பரவும் நோய்களையும் இவர்கள் எப்படிக் கட்டுப்படுத்துவார்கள்? என பொது மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.