districts

மதுரை முக்கிய செய்திகள்

எம்ஜிஆர் பேருந்து நிலையத்தை ஆய்வு செய்தார் மேயர்

மதுரை, ஜன.30- மதுரை மாநகராட்சி மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். பேருந்து நிலைய பிரச்சனைகள் குறித்து  தீக்கதிரில் செய்தி  (செவ்வாய்) வெளியாகியுள்ளது. இந்த நிலையில் திங்க ளன்று மேயர் இந்திராணி, சிம்ரன்ஜீத் சிங்,  ஆகியோர்   ஆய்வு மேற்கொண்டதாக மாநகராட்சி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்திக்குறிப்பில், “மதுரை மாநகராட்சி மாட்டுத் தாவணி எம்.ஜி.ஆர். பேருந்து நிலையத்தில் தினந் தோறும் உள்ளுர் மற்றும் வெளியூர் பயணிகள் ஏராள மானோர் வந்து செல்கின்றனர். இந்தப் பயணிகளின் வச திக்காக பேருந்து நிலையத்தில் சாலை வசதி, குடிநீர்  வசதி, கழிப்பறை வசதி, மின்விளக்கு வசதி, மழைநீர்  வடிகால் வசதி, பேருந்துகள் உள்ளே மற்றும் வெளியே  செல்லும் வழிகள், நடைபாதை வசதிகள், வாகன பாது காப்பு, பொருள்கள் பாதுகாப்பு அறை, தாய்மார் களுக்கான பாலூட்டும் அறை, தூய்மை பணிகள் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு தொடர்ந்து தினந்தோறும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இப்பணிகள் குறித்து மேயர், ஆணையாளர் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து எம்.ஜி.ஆர் பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் நலவாழ்வு மையத்தின் கட்டுமானப் பணிகளை பார்வை யிட்டனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வில்சன் காப்பர் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் மரணம்

சின்னாளபட்டி, ஜன.30- திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டியை அடுத்த, எஸ். பாறைப்பட்டியைச் சேர்ந்த மாரிமுத்து- கஸ்தூரி தம்பதி யரின் மூத்த மகன் முகேஷ் (10). இவர், அதே பகுதி யில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில்  5-ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், முகேஷ் ‘வில்சன் காப்பர்’ என்ற நோயால் பாதிக்கப்பட்டுக் கல்லீரல்  முழுமையாகச் செயலிழந்தது. இதனால், மதுரையில் தனியார், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற நிலையில், மேலும் துணை நோய்களால் அவா் பாதிக்  கப்பட்டார். இதையடுத்து, கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்தால் மட்டுமே காப்பாற்ற முடியும் என  மருத்துவர்கள் கூறியதால், அமைச்சர் ஐ. பெரியசாமி யின் பரிந்துரையின் பேரில், தமிழகச் சுகாதாரத் துறை  அமைச்சர் மா. சுப்ரமணியம், சிறுவனின் குடும்பத்தினரை அழைத்துப் பேசினார். இதைத் தொடா்ந்து முகேஷை சென்னை ஸ்டான்லி பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதித்துச் சிறப்புச் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச் சைக்காகச் சிறப்பு மருத்துவக் குழு மூலம் முதல்கட்ட பரி சோதனைகள் செய்துவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை அவா் உயிரிழந்தார். இதனிடையே இவரது சகோதரரான ஹரீசை (7) பரி சோதித்த மருத்துவர்கள் அதே நோய் தொற்றால் பாதிக்கப்  பட்டிருப்பதாகவும், இவருக்கும் கல்லீரல் தொடர்பான தீவிர சிகிச்சையளிக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர். எனவே இவர் சிகிச்சை பெறத் தமிழக அரசு உதவிக்  கரம் நீட்ட வேண்டும் எனப் பெற்றோரும், உறவினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மின் கசிவால் வீடு தீ பிடித்தது

சின்னாளபட்டி, ஜன.30- திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே கூலம்பட்டி யில் வசிப்பவர் ராஜமுத்து. திங்களன்று பிற்பகலில் இவரது வீடு திடீரெனத் தீப்பிடித்து எரிந்துள்ளது. வீட்டிலிருந்து கரும்புகை வருவதைக் கண்டு அருகில் வசிப்பவர்கள் ஆத்தூர் தீயணைப்புத் துறை மற்றும் செம்பட்டி காவல்  துறைக்குத் தகவல் தெரிவித்ததையடுத்து. தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். மின்கசிவு காரண மாகத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

சின்னாளபட்டி பேரூராட்சிக் கூட்டம்

சின்னாளப்பட்டி, ஜன.30- திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி பேரூராட்சி மன்றக் கூட்டம் தலைவர் பிரதீபா தலைமையில் நடை பெற்றது. துணைத்தலைவர் ஆனந்தி பாரதிராஜா, வார்டு  உறுப்பினர்கள் செல்வக்குமாரி, சங்கரேஸ்வரி, வேல்விழி, ஹேமா, தாமரைச்செல்வி, காமாட்சி, சாந்தி,  ராஜாத்தி, ராசு, ராஜசேகர், சுப்ரமணி உட்பட 16 ஆவது  வார்டு உறுப்பினர்கள் பேரூராட்சி செயல் அலுவலர் செல்வராஜ், முதன்மை உதவியாளர் சசிக்குமார், துப்புரவு ஆய்வாளர் கணேசன், துப்புரவு மேற்பார்வையாளர்கள் தங்கதுரை, சரளா, தலைமை எழுத்தர் கலியமூர்த்தி ஆகி யோர் கலந்துகொண்டனர். பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

அவதூறு பரப்பிய பாஜகவினர் கைது

திண்டுக்கல், ஜன.30- ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் துணை மேயர் ராஜப்பா ஆகியோருக்கு எதிராகச்  சமூக ஊடகங்களில் தவறான செய்திகள் பரப்பியது தொடர்பாகப் பாஜக-வின் தொழில் நுட்பப்பிரிவைச் சேர்ந்த பொம்முசுப்பு, நாட்ராயன் ஆகியோரை திண்டுக்  கல் வடக்கு காவல்துறையினர் கைது செய்தனர்.

பாண்டியன் கோட்டையைப் பார்வையிட்ட மாணவர்கள்

சிவகங்கை. ஜன.30- சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் 1996- 1997 ஆம் ஆண்டில் மத்திய அரசின் நிதி உதவி பெற்று கிரா மப்புற மாணவர்களின் வளர்ச்சியை மேம்படுத்துவ தற்காகக் கிராமக் கல்வி மற்றும் முன்னேற்றச் சங்கம் சார்பில் ஓராண்டு கணினிப் பயிற்சி நடத்தப்பட்டது. 50 மாண வர்கள் பயின்றனர். இவர்களுக்குள் கிடைக்கப்பெற்ற தொடர்புகளைக் கொண்டு இரண்டாண்டுகளுக்கு முன்னர்  “ரெட்ஸ் நண்பர்கள் “ என்ற புலனக்குழு தொடங்கினர். அதன் வழியாக 25 மாணவர்கள் இணைக்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் 26 ஆண்டுகளுக்குப் பின்னர்க் காளையார் கோவிலில் திங்களன்று சந்தித்துத் தங்க ளது நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டனர். தொடர்ந்து காளையார் கோவில் பாண்டியன் கோட்டை யைக் சுற்றிப்பார்த்தனர். சிவகங்கை தொல் நடைக் குழு  நிறுவனர் புலவர் கா.காளிராசா கலந்துகொண்டு இவ்வி டங்களின் வரலாற்றுச் சிறப்பை எடுத்துரைத்தார். ஒன்று  கூடல் நிகழ்வை சகாயராணி பெண்கள் மேல்நிலைப்பள்ளி யின் வரலாற்று ஆசிரியர் ஒ. முத்துக்குமார் செய்திருந்தார்.

மதுரை வைகை வடகரை - தென்கரை சாலையில் மின் விளக்குகள் அமைக்க வலியுறுத்தல்

மதுரை, ஜன.7- இரவில் போதிய வெளிச்சம் இல்லாமல்  விபத்துகள் மற்றும் சமூக விரோத செயல்  கள் நடைபெறும் மதுரை வைகை வட கரை - தென்கரை சாலையில் தாமதமின்றி மின் விளக்குகளைப் பொருத்த வேண்டு மெனக் கோரிக்கை எழுந்துள்ளது. மதுரை வைகை ஆற்றின் வடகரை  - தென்கரை இணைப்புச் சாலை மக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டுவிட்டது. நாட்கள் ஓடிக்கொண்டிருக்கிறது. பணி கள் மட்டும் இன்னும் முழுமையடைய வில்லை. முழுமையடையாத இந்த இணைப்புச்  சாலைகளில் தொடர்ந்து விபத்துகள் நிகழ் கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு தென்கரை பகுதியில் இரண்டு இருசக்கர வாகன ஓட்டிகள் இரவு நேரத்தில் போதிய வெளிச்சம் இல்லாததால் மோதி கீழே விழுந்துள்ளனர். அப்போது எதிரே வந்த ஆட்டோவும் வெளிச்சம் தெரியாமல் கீழே  விழுந்தவர்கள் இடித்ததில் இரு சக்கர  வாகன ஓட்டிகள் காயத்துடன் தப்பியுள்ளனர். வைகை வடகரைப் பகுதியில் உள்ள  இணைப்புச் சாலைகளிலும் போதிய வெளிச்சம் இல்லாததால் சமூக விரோதி களின் கூடாரமாகச் சாலை மாறி வரு கிறது. இந்தச் சாலையில் இரண்டு மது பானக் கடைகள் இயங்கி வருகிறது குடி மகன்கள் மது அருந்திவிட்டு சாலையி லேயே மது பாட்டில்களை உடைப்பது, வாக னங்களைத் தடுத்து நிறுத்துவது போன்ற  சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுகின்ற னர். சாலையில் இரவில் மாடுகள் சுற்றித் திரி கின்றன. சாலையின் நடுவில் படுத்திருக்கும் மாடுகள் தெரியாமல் இரு சக்கர வாகன ஓட்டிகள் கடைசி நொடியில் தடுமாறி விழுந்து காயமடைகின்றனர். மதுரை மாநகராட்சி போதிய வெளிச்சத்துடன் கூடிய மின்விளக்குகளை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்  சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு  1-ஆம் பகுதி செயலாளர் வி.கோட்டைசாமி, மேலப்பொன்னகரம் பகுதிச் செயலாளர் வை.ஸ்டாலின் ஆகியோர் வலியுறுத்தி யுள்ளனர்.

திண்டுக்கல் மாநகராட்சியில் துப்புரவுப் பணியாளர்களைக் கூடுதலாக  நியமிக்க சிபிஎம் கோரிக்கை

திண்டுக்கல், ஜன.30 திண்டுக்கல் பேருந்து கடைகள் ஏலம்  குறித்து நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்  போது அது குறித்து மன்றத்தில் விவா திப்பது சரியல்ல என்று பாஜக மாமன்ற  உறுப்பினர்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாமன்ற உறுப்பினர்கள் அறி வுறுத்தினர். திண்டுக்கல் மாநகராட்சி கூட்டம் திங்க ளன்று நடைபெற்றது. கூட்டத்தில் நடை பெற்ற விவாதம் வருமாறு: கே.எஸ்.கணேசன் (சிபிஎம்): பேருந்து  நிலையத்தில் புதிதாகக் கட்டப்பட்ட கடை கள் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. அதைப்பற்றி இந்த  மன்றத்தில் விவாதிப்பது நீதிமன்ற அவ மதிப்பாகும். இது தொடர்பாகப் பாஜக  உறுப்பினர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரவேண்டும். மன்றத்தில் இல்லாத அமைச்சரைப் பற்றி விவாதிப் பது மன்ற விதிமுறைகளுக்கு மீறியது. கண்ட னத்திற்குரியது என்றார். ஜோதிபாசு (சிபிஎம்): அதிமுக ஆட்சி யின் போது கட்டப்பட்ட கடைகள் பழுத டைந்து திறக்கப்படாமலும், ஏலம் விடப் படாமலும் இருந்தது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு புதிதாகப் பொறுப்பேற்றுள்ள திமுகத் தலைமையிலான மாமன்றம் ரூ.  40 லட்சம் செலவில் செப்பனிட்டு ஏலம் விட்ட தன் மூலம் மாநகராட்சிக்கு வருவாய் பெருகி யுள்ளது. அரசியல் காழ்புணர்ச்சியுடன் பாஜக வும், அதிமுகவும் இந்தப் பிரச்சனையைப் பூதாகரமாக மாற்றி மன்றத்தை நடக்கவிடா மல் தடுத்து வருகிறார்கள். இது கண்ட னத்திற்குரியது என்றார். திண்டுக்கல் மாநகராட்சி நகராட்சியாக இருந்த போது துப்புரவுத் தொழிலாளர் 410 பேர் இருந்தனர். தற்போது மாநக ராட்சியாக மாறிய பிறகு 120 பேர் பணி யாற்றி வருகிறார்கள். அன்றைக்கு இருந்த  மக்கள் தொகையை விட இப்போது நான்கு  மடங்கு மக்கள் தொகை உயர்ந்துள்ளது. ஆனால் துப்புரவுப் பணியாளர்கள் குறைக் கப்பட்டுள்ளனர். மக்கள் தொகைக்கு ஏற்ப  துப்புரவுப் பணியாளர்களை நிரந்தரப் பணி யில் நியமிக்க வேண்டும். மாரியம்மாள் (சிபிஎம்): அரசு பெண்கள்  மேல்நிலைப்பள்ளி அருகில் சிறுநீர் கழிப்பி டம் கட்டக்கூடாது. இதனால் பள்ளி மாணவி களுக்குத் தொற்று ஏற்படும் அபாயம் உள் ளது என்றார்.

பாலியல் தொல்லை: 10 ஆண்டு சிறை

தேனி, ஜன.30- தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே ஆனை மலையன்பட்டி டிஇஎல்சி.சர்ச் தெருவைச் சேர்ந்தவர்கள் ஜீவமணி(50), ராசு(68). இவர்கள் இருவரும் அதே பகுதி யில் உள்ள ஐந்து வயது சிறுமிக்கு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். புகாரின் பேரில் 2018-ஆம் ஆண்டு ராயப்பன்பட்டி காவல்துறையினர் இரு வரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். இந்த  வழக்கு தேனி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடை பெற்றது. விசாரணை நேற்று முடிந்த நிலையில் குற்ற வாளிகளுக்குத் தலா பத்து ஆண்டுகள் சிறைத்தண்ட னையும், ரூ.25ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி திலகம் தீர்ப்பளித்தார்.

தேனி மருத்துவக்கல்லூரியில் தொழுநோய் ஒழிப்பு தினம்

தேனி, ஜன.30- தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளா கத்தில் தேசிய தொழுநோய் ஒழிப்புத்திட்டம் சார்பில் தொழுநோய் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்- உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்விற்கு மருத்து வக் கல்லூரி துணை முதல்வர் கண்ணன் போஜராஜ் தலைமை வகித்தார். செவிலியர் கல்லூரி மாணவர்கள்- மருத்துவர்கள் மருத்துவமனை வளாகத்தில் பேரணி சென்றனர். தொடர்ந்து தொழுநோய் கடைப்பிடிப்பு குறித்து உறுதிமொழி ஏற்றனர்.

பேரிடர் காலப் பயிற்சி முகாம்

ஆண்டிபட்டி, ஜன.30- ஆண்டிபட்டி அருகே உள்ள தனியார் கல்லூரியில் ஆப்தமித்ரா நிறுவனம் சார்பில் பேரிடர் காலப் பயிற்சி முகாம் நடைபெற்றது. ஆண்டிபட்டி அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஆப்தமித்ரா பேரிடர் கால நண்பன் பயிற்சி  நிறைவு விழா மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் பரி மளா தேவி தலைமையில் நடைபெற்றது. ஆண்டிபட்டி வட்டாட்சியர் சுந்தர் லால் முன்னிலை வகித்தார். மருத்து வர் மூங்கில் ராஜா, மாவட்ட தீயணைப்பு அலுவலர் பொன்னம்பலம், பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் ஆர்த்தி, ‌ஒருங்கிணைப்பாளர் சுப்புராஜ், வெட் டிரஸ்ட் பெருமாள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் பயிற்சிக்கான ஏற்பாடுகளைச் செய்து வழி நடத்தினர். தன்னார்வலர்களின் பேரிடர் கால மீட்புப் பணிகள் குறித்த ஒத்திகை நிகழ்ச்சி தத்ரூபமாகச் செய்து காண்  பிக்கப்பட்டது. நிறைவில் பங்கேற்றவர்களுக்குச் சான்றி தழ் வழங்கப்பட்டது.

நெருக்கடிகளைத் தீர்க்கக்கோரி ஊரக வளர்ச்சித்துறையினர் ஆர்ப்பாட்டம்

கடமலைக்குண்டு, ஜன.30- கடமலை-மயிலை ஒன்றியம் மயிலாடும்பாறை ஒன்றிய  அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலு வலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு ஊரக வளர்ச்சித் துறை சங்க மாவட்டச் செயலாளர் தாமோதரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், “ வளர்ச்சித் துறை யில் திணிக்கப்படும் பணி நெருக்கடிகள், காலங் கடந்த ஆய்வுகள், விடுமுறை தினம் மற்றும் இரவு நேர ஆய்வு கள் உள்ளிட்டவற்றை அரசு கைவிட வேண்டும். பெரிய  ஊராட்சிகளைப் பிரித்து அதிகபட்சமாக 25 ஊராட்சி களை உள்ளடக்கி ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்க வேண்டும். வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள ஊராட்சி ஒன்றிய பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.  உதவி இயக்குநர், உதவிப் பொறியாளர்கள்- ஒன்றியப்  பொறியாளர்களின் நிலை பதவி உயர்வு ஆணைகளைக் காலத் தாமதமின்றி வெளியிட வேண்டும் என வலி யுறுத்தினர்.

மதுரை மாவட்டத்தில்  நெல் கொள்முதல் செய்வதில் தொய்வு குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் குற்றச்சாட்டு

மதுரை, ஜன.30- மதுரை மாவட்டத்தில் நெல் கொள்  முதல் செய்வதில் அதிகாரிகள் அலட்சி யத்துடன் செயல்பட்டனர் என்று குறைதீர்  கூட்டத்தில் குற்றம்சாட்டியுள்ள விவசாயி கள், ஊழல்-மோசடி இல்லாமல் நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட வேண்டும் என்றும்  வலியுறுத்தினர்.  மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. வேளாண் இணை இயக்குநர் விவேகானந்தன், தமிழ்  நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் அருண் பிரசாத், அரசுத்துறை அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்  டனர். கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில், நெல் அறுவடைப் பணிகள் நடைபெறும்  பகுதிகளில் உடனடியாக நேரடி நெல் கொள் முதல் நிலையங்களை திறக்க வேண்டும். மோசடி-ஊழல் புகார்களுக்கு இடம் தராத வகையில் நெல்கொள்முதல் நிலையங்கள் செயல்பட வேண்டும் என்றனர். அதற்கு  பதிலளித்த நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் அருண் பிரசாத், “மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் முதல் வருகிற மார்ச் மாதம் வரை  160 நேரடி நெல் கொள்முதல் நிலையங்  களை திறக்க ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஐந்து கிலோமீட்டர் தொலைவுக்கு ஒரு  நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்  டும் என்பது விதி. மதுரை மாவட்டத்தின் ஒரு  சில பகுதிகளில் ஒரு கிலோ மீட்டர் தொலை வில் கூட மற்றொரு நெல் கொள்முதல் நிலை யம் திறக்கப்பட்டுள்ளது என்றார். 

கொள்முதல் நிலையம் திறப்பில் தொய்வு

கூட்டத்தில் தமிழ்நாடு கரும்பு விவசாயி கள் சங்க மாநிலத் துணைத் தலைவர் என். பழனிசாமி பேசுகையில், மதுரை மாவட்டத்  தில் 60 சதவீதம் நெல் அறுவடை முடிந்துள் ளது. ஆறு கொள்முதல் நிலையங்கள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. கடந்தாண்டு இதே நேரத்தில் 100 மையங்கள் திறக் கப்பட்டன. மழை தொடர்ச்சியாக பெய்து விரை வாகவே நடவு செய்து விவசாயிகள் அறு வடை செய்து விட்டனர். கடந்த டிசம்பரி லேயே நெல் கொள்முதல் மையங்களைத்  திறந்திருக்க வேண்டும். ஜனவரியிலும் திறக்கவில்லை. இனிமேல் திறப்பதால் யாருக்கும் பயனில்லை. நெல் கொள்முதல் விஷயத்தில் இந்தாண்டு போல் எந்த ஆண்  டும் அதிகாரிகள் அலட்சியம் காட்டிய தில்லை என்றார். இனிமேல் திறப்பதால் யாருக்கும் பய னில்லை என்ற வாதம் சரியானது தானா?  என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்  விக்கு பதிலளித்த அவர், தும்பைப்பட்டி யில் நாளொன்றுக்கு ஐந்து லோடு, கருங்  காலக்குடியில் நான்கு லோடு லாரிகளில் நெல் ஏற்றப்பட்டது என்பது உண்மை. கொள்முதல் நிலையம் திறக்காத பட்சத்தில் இந்த மூடைகள் எங்கே சென்றிருக்கும். கொங்கம்பட்டி பகுதியில்  ஆயிரம் பேர்  நெல்லை அறுவடை செய்து குவித்திருந்த னர். நெல் கொள்முதல் நிலையம் திறக்க வில்லை என விவசாயிகள் ஊடகங்களில் பேட்டியளித்த பின் இப்போது நிலை பர வாயில்லை. கொள்முதல் நிலையம் திறப்ப தற்கு முன்பே பலர் நெல்லை விற்றுவிட்டனர். கச்சிராயன்பட்டி, மேலவளவு, அட்ட பட்டி பகுதியில் கொள்முதல் நிலையம் திறக்கவில்லை. எனக்குத் தெரிந்த வரை சனிக்கிழமை வரை பத்து கொள்முதல் நிலையங்கள் திறந்திருந்தால் அதிகம். மதுரை மண்டலத்தில் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்வது தொடர்பான வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் உள்ளது. இந்தப் பிரச்சனை எப்போது தீரும். 160 கொள்முதல் நிலையம் முழுமை யாக திறப்பதற்குள் விவசாயிகள் வியா பாரிகளிடம் நெல்லை விற்றுவிடுவார்கள். தாமதமாக திறந்தால், வியாபாரிகள்தான் விவசாயிகள் போர்வையில் நெல்லைக் கொடுப்பார்கள் என்று தெரிவித்தார்.