districts

img

பெண் சிசுக்கொலை, கருக் கொலையினை தடுத்திடுக!

மதுரை, ஜூலை 27-  அனைந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மதுரை புறநகர் மாவட்ட  16 ஆவது மாநாடு சோழவந்தா னில் மைதிலி சிவராமன் நினை வரங்கில் புதனன்று நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்டத் தலை வர் க.பிரேமலதா, நிர்வாகிகள் அட்சயா, மகாலட்சுமி ஆகியோர் தலைமை வகித்தனர். சங்கக் கொடியினை மாவட்டக்குழு உறுப்  பினர் எஸ்.சின்னம்மாள் ஏற்றினார். வரவேற்புக்குழு தலைவர் ஏ. வேல்பாண்டி வரவேற்றார். அமர்த வள்ளி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநிலச் செயலாளர் எஸ்.லெட்சுமி துவக்கி வைத்துப்  பேசினார். மாவட்டச் செயலாளர்  செ.முத்துராணி வேலையறிக்கை யும் மாவட்டப் பொருளாளர் பர்வத வர்த்தினி வரவு-செலவு அறிக்கை யும் சமர்ப்பித்தனர். சங்க மாநிலச்  செயலாளர் எஸ்.கே.பொன்னுத் தாய், மாநில நிர்வாகி ஆர்.சசி கலா ஆகியோர் வாழ்த்திப் பேசி னர். மாநிலத் தலைவர் எஸ். வாலண்டினா நிறைவுரையாற்றி னார். மாவட்ட துணைத் தலைவர் மோகனவிஜயா நன்றி கூறினார்.  முன்னதாக, பெண்களுக்கு எதி ராக நடக்கக்கூடிய பாலியல் ரீதி யான வன்முறைகளை தடுக்க சட்டம் இயற்றக்கோரி மாநாட்டு அரங்கத்திலிருந்து துவங்கி பேரணி நடைபெற்றது. 

புதிய நிர்வாகிகள் 

மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்டத் தலைவராக சி.மலர்விழி, செயலா ளராக க.பிரேமலதா, பொருளாள ராக என்.விஜயா, துணைத் தலை வர்களாக எஸ்.கே.பொன்னுத் தாய், செ.முத்துராணி, துணைச் செயலாளர்களாக எழில்அமுதா, அமிர்தவள்ளி ஆகியோர் தேர்வு செய்யபட்டனர். தொட்டில் குழந்தை திட்டத்தை அமல்படுத்த வேண்டும். பெண்  சிசு கொலை, கருக் கொலை யினை தடுத்திட வேண்டும். 100 நாள்  வேலையை முறையாக அமல் படுத்த வேண்டும். , 100 நாள் வேலையை நகர்ப்புறங்களுக்கு விரிவுபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.