மதுரை மாநக ராட்சி காளியம்மன் கோவில் 80-ஆவது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டி யிடும் டி.நாகராஜன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவ ராகவும், வாலிபர் சங்க இரத்த தான கழக மாவட்ட செயலாளராக பணியாற்றியவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் 1993 ஆம் ஆண்டில் இணைந்து பகுதி உறுப்பி னராகவும், தற்போது மாவட்டக் குழு உறுப்பி னராகவும் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் உரிமைகள் பாதுகாப்பு சங்கத்தின் மாவட்ட தலைவராக வும் செயல்பட்டு வருபவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் டி.நாகராஜன் கூறுகையில், 80-ஆவது வார்டு பகுதியில் நீண்ட நாட்க ளாக இருக்கும் பாதாளச் சாக்கடை பிரச்ச னையை சரி செய்து, வார்டில் கழிவு நீரேற்று மோட்டார் அறை அமைத்து தெருவில் கழிவு நீர் தேங்குவதை சரிசெய்வேன். அனைத்து பகுதிகளிலும் தரமான, உறுதியான சாலை கள் போடுவேன். மாணவர்களுக்கான தனித்திறன் பயிற்சி மையம் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி மையம் தொடங்கப்படும், இப்பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு வர முயற்சி மேற்கொள்வேன். மேலும் புதிய மாமன்ற அலுவலகம் அமைத்து எல்லா நேரங்களிலும் மக்கள் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன். சாக்கடை கலக்காத தூய்மையான குடிநீர் கிடைத்திட புதிய பைப் லைன் அமைப் பேன். விதவை பென்சன், நலவாரியம், அரசு நலத்திட்ட உதவிகள் பெற்றுத் தருவேன். நிலத்தடி நீர்மட்டம் உயர பல்வேறு சுற்றுச் சூழலுக்கு உகந்தபடி நடவடிக்கைகள் மேற்கொள்வேன். 3 மாதத்திற்கு ஒருமுறை வரவு - செலவு அறிக்கை, திட்ட அறிக்கை வெளியிடப்பட்டு குறைதீர் கூட்டம் நடத்த நடவடிக்கை எடுப்பேன். மக்கள் கோரிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் நலக் கோரிக்கை கள் மாமன்றத்தில் ஒலித்திட முறைசாரா தொழிலாளர் மற்றும் பெண்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் அதிக அளவில் பெற் றுத்தர, 100 நாள் வேலை திட்டத்தை மாநக ராட்சி பகுதிகளுக்கும் விரிவாக்கம் செய்திட முயற்சி மேற்கொள்வேன். இவ்வாறு அவர் கூறினார்.